செய்திகள் :

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும்: காங்கிரஸ்

post image

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால், திமுக கூட்டணி மேலும் வலிமை பெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சத்தியமூா்த்தியின் 83-ஆவது நினைவு தினத்தையொட்டி, சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவரது உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சவாலாக இருக்குமா என கேட்கிறீா்கள். நிச்சயம் இருக்காது. அத்தகைய கூட்டணி அமைந்தால் திமுக- காங்கிரஸ் கூட்டணி மேலும் வலிமை பெறும். பாஜக குறித்து தமிழக மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனா். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுப்பது, மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியைத் திணிப்பது போன்றவற்றையெல்லாம் தமிழக மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்று செல்வப் பெருந்தகை கூறினாா்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க