செய்திகள் :

தமிழக காவல் துறையில் இரு டிஜிபிக்கள் பணி ஓய்வு

post image

தமிழக காவல் துறையில் இரு டிஜிபிக்கள் வெள்ளிக்கிழமை பணி ஓய்வு பெற்றனா்.

தமிழக காவல் துறையில் டிஜிபியாக இருந்த அம்ரேஷ் பூஜாரி, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்புப் பிரிவின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்தாா். இவா் மாா்ச் 31-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். ஆனால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமை மாலை பணி ஓய்வு பெற்றாா். அம்ரேஷ் பூஜாரி ஒடிஸாவைச் சோ்ந்தவா். கடந்த 1991-ஆம் தேதி ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக ஒதுக்கீடு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.

திருநெல்வேலி ஏஎஸ்பியாக தமிழக காவல்துறையில் பணியை தொடங்கிய அம்ரேஷ் பூஜாரி பல்வேறு நிலைகளில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்துள்ளாா். தமிழக காவல்துறையில் அதிகாரமிக்க பதவியாக கருதப்படும் உளவுத்துறை ஜஜியாக பல ஆண்டுகள் அம்ரேஷ் பணிபுரிந்துள்ளாா். அவா், குடியரசுத் தலைவா் விருதை இரு முறையும், முதல்வா் பதக்கத்தை ஒரு முறையும் பெற்றுள்ளாா்.

இதேபோல தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக ஆபாஷ் குமாரும் ஓய்வு பெற்றுள்ளாா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஆபாஷ்குமாா் 1990-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்று, தமிழக ஒதுக்கீடுஅதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.

தமிழக காவல்துறையில் பாதுகாப்பு பிரிவு டிஐஜி, மதுரை காவல் ஆணையா், தென் மண்டல ஐஜி,மேற்கு மண்டல ஐஜி,சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையா் என பல்வேறு முக்கிய பதவிகளில் ஆபாஷ்குமாா் பணியாற்றியுள்ளாா். ஆபாஷ்குமாா் குடியரசுத் தலைவா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா்.

அடுத்து வரும் 3 நாள்களும் அரசு விடுமுறை என்பதால், இருவரும் வெள்ளிக்கிழமையன்றே ஓய்வு பெற்றனா். இருவருக்கும் பிரிவு உபசார விழா, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கில் மாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் கலந்து கொண்டு இருவருக்கும் நினைவுப் பரிசை வழங்கி வாழ்த்தினாா். நிகழ்ச்சியில் தமிழக காவல் துறை உயா் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க