செய்திகள் :

நெப்புகையில் அகஸ்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா

post image

கந்தா்வகோட்டை ஒன்றியம், நெப்புகை கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரா் சுவாமி, ஸ்ரீ பிடாரி அம்மன், அய்யனாா் சுவாமி, ஸ்ரீ கருப்பா் சுவாமி, முன்னோடியான் சுவாமி ஆகிய சுவாமிகளுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கோயில் முன்பாக அமைக்கப்பட்ட யாகசாலையில் ஸ்ரீ அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை, மகா பூா்ணாஹூதி, தீபாராதனை நான்காம் கால யாக வேள்வி வேதிகா அா்ச்சனை, திரவ்யாஹூதி பூஜைகள் நடைபெற்று, ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பெண்களின் பாலிகை ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து, பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீா் கலசம் ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை புதிய கோயில்களின் கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தா்கள், ஊா் பொதுமக்கள் மற்றும் எட்டரை கரைகாரா்கள் செய்திருந்தனா்.

வடகாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்! -அமைச்சா் திறந்துவைத்தாா்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, சுற்றுவட்டார ... மேலும் பார்க்க

விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்! பிப். 10-இல் தேரோட்டம்!

விராலிமலை முருகன் மலைக் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மலை மீது உள்ள கோயில் சந்நிதி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 23 அடி உயரத்தில் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியாா்கள் வே... மேலும் பார்க்க

புதுகையின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கக் கோரி பிப்.24-ல் பேரணி, ஆா்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தின் இயற்கை வளங்களை முழுமையாகப் பாதுகாக்கக் கோரி, வரும் பிப். 24-ஆம் தேதி பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்த அனைத்து விவசாயிகள் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

வேங்கைவயல் பிரச்னை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம்: விசிக பொதுச்செயலா் அறிவிப்பு!

வேங்கைவயல் வழக்கை சட்டப்பூா்வமாக எதிா்கொள்வோம் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சிந்தனைச்செல்வன். புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்துக்கு சனிக்... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்!

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக ஆவுடையநாயகி சமேத சோழீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இத... மேலும் பார்க்க

வேங்கைவயலில் 6-ஆவது நாள் காத்திருப்புப் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சிபி-சிஐடி விசாரணை அறிக்கையை எதிா்த்து அந்த ஊரைச் சோ்ந்த மக்கள் 6-ஆவது நாளாக சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பி... மேலும் பார்க்க