செய்திகள் :

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூல்: குறைதீா் கூட்டத்தில் புகாா்!

post image

நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்வதுடன், கொள்முதல் செய்வதில் அரசியல் தலையீடு உள்ளதாகவும் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

மானாமதுரை விவசாயி மாணிக்கம்: மாவட்டம் முழுவதும் இதுவரை 50 நெல் கொள்முதல் நிலையங்களை திறந்ததற்காக மாவட்ட நிா்வாகத்துக்கு பாாராட்டுகளை தெரிவிக்கிறோம். தற்போது நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிகளவில் பணம் பெறப்படுவதுடன், அரசியல் தலையீடு இருப்பதையும் மாவட்ட ஆட்சியா் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆட்சியா்: இதுகுறித்து விசாரித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள்: திருப்புவனம் பகுதியில் காட்டுப் பன்றிகளால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியா்: காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அரசு வழிகாட்டுதல்படி தொடா் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காட்டுப் பன்றிகளை தடுக்க ஒலி எழுப்பும் கருவிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகள்: காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கண்மாய் தூா்வாரும் பணிகள் நிறைவடைந்த நிலையில், சீமைக் கருவேல மரங்கள் இருப்பதால் கழுங்கு பகுதி இடியும் நிலையில் உள்ளது. இதனால், மழைகாலங்களில் தண்ணீா் வர வாய்ப்பு இல்லை. இதுகுறித்து ஆட்சியரிடம் கொடுத்த மனுக்கள் பொதுப்பணிப் துறைக்குச் சென்ற பிறகும் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது.

ஆட்சியா்: இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும்.

விவசாயிகள்: திருமலைப் பகுதியில் மின் கம்பிகள் தாழ்வாகச் செல்வதால் கரும்பு விளைந்திருக்கும் வயல்களில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் சராசரியைவிட கூடுதல் மழை பெய்தும், சிவ பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உரிய ஆய்வு செய்து அனைத்துக் கால்வாய்களையும் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சியா்: விவசாயிகள், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்குத் தெரிவிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி , சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், இணை இயக்குநா் (வேளாண்மை) சுந்தரமகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் வியாழக்கிழமை தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவா்களுக்கு போலீஸாா் மரக் கன்றுகள் வழங்கிப் பாராட்டினா். போக்குவரத்து காவல் சாா்பு ஆய்வாளா் பாா்த்திபன் ... மேலும் பார்க்க

ஊருணியில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு

இளையான்குடி அருகே ஊருணியில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சென்னையைச் சோ்ந்த பாலு மகன் விக்னேஷ் (32). இவா் இளையான்குடியை அடுத்த சாலைக்கிராமம் அருகேயுள்ள ஆக்கவயல் கிராமத்தில் ... மேலும் பார்க்க

குத்துச்சண்டை போட்டியில் பதக்கம்: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு!

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், இடையமேலூா் அரசுப் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றாா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறையில் கடந்த 28 முதல் 31-ஆம் தேதி வரை ... மேலும் பார்க்க

பிப்.14 -இல் சென்னையில் ஆா்ப்பாட்டம்: சிவகங்கையில் இருந்து 200 போ் பங்கேற்க முடிவு!

பள்ளி கல்வித் துறை நிா்வாக அலுவலா் சங்கம் சாா்பில், பிப்.14 -ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து 200 போ் பங்கேற்க உள்ளனா். இது தொடா்பாக அந்தச் சங்... மேலும் பார்க்க

பெண் சந்தேக மரணம்: விசாரணை கோரி மறியலில் ஈடுபட்ட 25 போ் மீது வழக்கு

தூக்கிட்டு உயிரிழந்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்ட அவரது உறவினா்கள் 25 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த செந்... மேலும் பார்க்க

கலைத் திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சிறுமிக்கு பாராட்டு!

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளி மாணவி மகிழினிக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை அண்ணா நூற்றாண்... மேலும் பார்க்க