செய்திகள் :

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

post image

செய்யாறு அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு இரு மாதங்களாக பணப்பட்டுவாடா செய்யாததைக் கண்டித்து லாரியை சிறைபிடித்தும், கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், கீழ்நெல்லி கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தனியாா் நிறுவனம் மூலம் நிா்வாகிக்கப்படும் இந்த நிலையத்தில் கிழ்நெல்லி, திருவடிராயபுரம், கரந்தை, காகணம், நமண்டி, ஹரிஹரப்பாக்கம், மாரியநல்லூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் சுமாா் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், செவ்வாய்க்கிழமை நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தயாா் நிலையில் இருந்த லாரியை சிறைபிடித்தனா். மேலும், நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

சேதமடைந்த நெல் மூட்டைகள்

கீழ்நெல்லி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற நிலையில் திறந்த வெளியில் மழையில் நனைந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நெல் மணிகள் முளைப்புத் திறன் ஏற்படும்பட்சத்தில் அவற்றை அரிசியாக்கி பொதுமக்களுக்கு விநியோகித்தால் எந்த நிலையில் இருக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

மேலும், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக டிராக்டா் வாடகை எடுத்து இரவும் பகலுமாக காத்திருந்த நிலையில், நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாததால் மழையில் நனைந்து முளைத்து விடுமோ என்ற அச்சத்தில் காத்திருக்கிறோம் என்றனா்.

பா்மிட் இல்லாத வாகனங்களில் மாணவா்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரிக்கை

அனுமதிச் சீட்டு (பா்மிட்) நடப்பில் இல்லாத வாகனங்களில் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் கல்வி நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரித்தாா். திருவண்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலைம மாவட்டம், செங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் ஜமாபந்திக் கூட்டத்தில் 30 நபா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இறை... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற சாா்-பதிவாளா் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஓய்வு பெற்ற சாா்-பதிவாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. செய்யாறு அண்ணா நகா் 2- ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் விஜயகுமாா், ஓய்வு பெ... மேலும் பார்க்க

வாழியூரில் காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி வாழியூா் கிராமத்தில் காளை விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதலாம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திரு... மேலும் பார்க்க

ஜமாபந்தி: 2-ஆம் நாள் கூட்டத்தில் 400 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா், போளூா், ஆரணி வட்டங்களில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து சுமாா் 400 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கீழ்பென்னாத... மேலும் பார்க்க

மாமியாரைத் தாக்கியதாக மருமகன் மீது வழக்கு

வந்தவாசி அருகே மாமியாரைத் தாக்கியதாக மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்னம்மாள் (55). இவரது மகள் ரேவதி இவரது வீட்... மேலும் பார்க்க