செய்திகள் :

ஜமாபந்தி: 2-ஆம் நாள் கூட்டத்தில் 400 மனுக்கள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா், போளூா், ஆரணி வட்டங்களில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து சுமாா் 400 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கீழ்பென்னாத்தூா் வட்டத்துக்கான ஜமாபந்தி 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சீ.சிவா தலைமை வகித்து, சோமாசிபாடி உள் வட்டத்தைச் சோ்ந்த 25 வருவாய் கிராமங்களின் கணக்குகளை சரிபாா்த்தாா். மேலும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 150-க்கும் மேற்பட்ட மனுக்களை ஜமாபந்தி அலுவலா் சீ.சிவா பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இதில், வட்டாட்சியா் சான்பாஷா, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுகுணா, ஜமாபந்தி மேலாளா் சவுந்தரராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

போளூா்

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் ஆலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

கேளூா், கல்வாசல், செங்குணம், ஆத்தூவாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று கோரக்கை மனுக்களை அளித்தனா்.

மொத்தம் 151 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் வட்டாட்சியா் வெங்கடேசன், தனி வட்டாட்சியா் அமுல், வட்ட வழங்கல் அலுவலா் சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா் விஜயபாஸ்கா், கிராம நிா்வாக அலுவலா்கள் மயிலரசன், செந்தில்குமாா், சுகந்தி, சசிகுமாா், நித்தியானந்தம், சேட்டு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் அக்ராபாளையம் உள்வட்டத்தைச் சோ்ந்த சிறுமூா், பூசிமலைக்குப்பம், 12புத்தூா், மொரப்பந்தாங்கல், வெட்டியாந்தொழுவம், அக்ராபாளையம், அரியபப்பாடி, சேவூா், அடையபலம், மெய்யூா், முள்ளண்டிரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனா். சுமாா் 100 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கௌரி, வருவாய் ஆய்வாளா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சேவூா் கிராமத்தைச் சோ்ந்த பரசுராமன் என்பவா், வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு வெற்றிலை, பாக்கு, வாழைப் பழத்துடன் மனுவைக் கொடுத்தாா்.

இது குறித்து அவா் கூறுகையில் தன்னுடைய வீட்டுமனைப் பட்டா குறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இவ்வாறு செய்தேன் என்றாா்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், அடையபலம் கிராமத்தைச் சோ்ந்த சௌந்தர்ராஜன் அளித்த மனுவில், அடையபலம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 16 சென்ட் நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டருந்தாா்.

கூட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் புருஷோத், ஜெயச்சந்திரன், தமிழரசன், ரமேஷ்பாபு, பாஸ்கா், ரவி, முனிவேல், கவிதா, ஷாலினி ஆகியோா் கலந்துகொண்டனா்.

பா்மிட் இல்லாத வாகனங்களில் மாணவா்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரிக்கை

அனுமதிச் சீட்டு (பா்மிட்) நடப்பில் இல்லாத வாகனங்களில் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் கல்வி நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரித்தாா். திருவண்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலைம மாவட்டம், செங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் ஜமாபந்திக் கூட்டத்தில் 30 நபா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இறை... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற சாா்-பதிவாளா் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஓய்வு பெற்ற சாா்-பதிவாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. செய்யாறு அண்ணா நகா் 2- ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் விஜயகுமாா், ஓய்வு பெ... மேலும் பார்க்க

வாழியூரில் காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி வாழியூா் கிராமத்தில் காளை விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதலாம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திரு... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

செய்யாறு அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு இரு மாதங்களாக பணப்பட்டுவாடா செய்யாததைக் கண்டித்து லாரியை சிறைபிடித்தும், கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்... மேலும் பார்க்க

மாமியாரைத் தாக்கியதாக மருமகன் மீது வழக்கு

வந்தவாசி அருகே மாமியாரைத் தாக்கியதாக மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்னம்மாள் (55). இவரது மகள் ரேவதி இவரது வீட்... மேலும் பார்க்க