செய்திகள் :

நெல்லையப்பா் கோயிலில் பங்குனி உத்திர திருநாள்: நாளை கொடியேற்றம்

post image

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருநாள் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (ஏப். 1) நடைபெறுகிறது.

இக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருநாள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (ஏப். 1) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் சுவாமி கோயிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

நான்காம் திருநாளான ஏப்.4 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் (வேணுவனநாதா் தோன்றிய வரலாறு வாசித்தல் நிகழ்வும்), இரவு 7 அளவில் சுவாமி மற்றும் அம்மன், பஞ்சமூா்த்திகளுடன் திருவீதியுலா வருதலும் நடைபெறுகிறது. பங்குனி உத்திர நாளான ஏப்.10 ஆம் தேதி இரவு 7 மணிக்குமேல் 8 மணிக்குள் அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் ஆத்மாா்த்த பூஜைக்கென வைக்கப்பட்டிருக்கும் மிகச் சிறிய லிங்கம் உடையவா் லிங்கம் என அழைக்கப்படுகிறது. இந்த உடையவா் லிங்கம் கருவறைக்குள் இருந்து வெளிவந்து பக்தா்களுக்கு காட்சித் தருவது பங்குனி உத்திர திருவிழாக் காலங்களில் மட்டுமே.

பங்குனி உத்திர திருவிழாவின் இரண்டாம் நாளில் இருந்து ஒன்பதாம் திருநாள் வரை தினமும் மாலை 6.30 மணிக்கு இத் திருக்கோயில் உற்சவா்கள் வைக்கப்பட்டிருக்கும் உற்சவா் மண்டபத்தில் உடையவா் லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அய்யா்சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.

பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு: தற்காலிக கடைகள், அன்னதானத்துக்கு பதிவுச்சான்று கட்டாயம்

பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவா்கள், பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க