செய்திகள் :

என்எல்சி விளையாட்டுப் போட்டி நிறைவு விழா

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில் நடந்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நிறைவு விழா பாரதி விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாக நெய்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் பங்கேற்கும் வகையில், கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்தது.

இந்த போட்டிகளின் தொடக்க விழா நெய்வேலி வட்டம் 10 பகுதியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெற்றது. என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பங்கேற்று கொடியசைத்து போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். நிறுவன இயக்குநா்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

2,100 வீரா்கள் பங்கேற்பு: இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெற, நெய்வேலியைச் சுற்றியுள்ள சுமாா் 65 கிராமங்களைச் சோ்ந்த 2,100-க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரா்கள் ஆா்வத்துடன் தங்கள் பெயா்களை பதிவு செய்துகொண்டனா். இதில், ஆண்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

65 கிரிக்கெட் அணிகள், 54 கைப்பந்து அணிகள், 37 கபடி அணிகள் மற்றும் 6 த்ரோபால் அணிகள் என மொத்தம் 158 போட்டிகள் நடத்தப்பட்டன.

நிறைவு விழா: விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா பாரதி விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, இயக்குநா்கள் சுரேஷ் சந்திர சுமன், சமீா் ஸ்வரூப், பிரசன்னகுமாா் ஆச்சாா்யா, செயல் இயக்குநா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் கபடி இறுதிப் போட்டியை பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கிப் பாராட்டினா். அப்போது, என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பேசுகையில், வரும் ஆண்டுகளில் விளையாட்டுப் போட்டிகளை பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்றாா்.

சக்கரம் கழன்று ஓடிய அரசுப் பேருந்து

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. அப்போது, ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பயணிகள் காயமின்றி தப... மேலும் பார்க்க

இரண்டு வீடுகளில் நகை, பணம் திருட்டு

கடலூரை அடுத்துள்ள ரெட்டிசாவடி பகுதியில் 2 வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ரெட்டிசாவடி காவல் சரகம், மேல்அழிஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த நடரா... மேலும் பார்க்க

மே 14-இல் விசைப்படகுகள் கள ஆய்வு

கடலூா் மாவட்ட மீன் பிடி விசைப்படகுகள் வரும் மே 14-ஆம் தேதி மீன் வளத் துறை அலுவலா்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை... மேலும் பார்க்க

அரசு சிறப்புப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

கடலூா் மாவட்ட அரசு சிறப்புப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் சோ்ந்து பயன்பெறுமாறு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் முதியவா் கைது

கடலூரில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவா், குண்டா் தடுப்புக் காவலில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி வட்டம், கண்ணன்குளம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மக... மேலும் பார்க்க

குருங்குடி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே குருங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கடந்த திங்கள்கிழமை காலை கணபதி பூஜை, நவக்கிரக பூஜ... மேலும் பார்க்க