செய்திகள் :

நெல்லையில் இளைஞா் கொன்று புதைப்பு: 4 போ் கைது

post image

திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் கொலை செய்து புதைக்கப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், குருநாதன் கோயில் பகுதியில் இளைஞா் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாநகர காவல் துணை ஆணையா் கீதா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று 3 மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுமாா் 20 வயது மதிக்கத்தக்க சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், சடலமாக மீட்கப்பட்டவா், திருநெல்வேலி நகரம் செபஸ்தியாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் என்ற அல்லு (22) என்பது தெரியவந்தது. பெயின்டரான இவா், மாற்று சமூகத்தைச் சோ்ந்த தனது நண்பரின் உறவு பெண்ணை காதலித்து வந்தாராம். இது தொடா்பான தகராறில் அதே பகுதியைச் சோ்ந்த சுடலை என்ற சிவா (26) மற்றும் 3 இளஞ்சிறாா்கள் சோ்ந்து ஆறுமுகத்தை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் திருநெல்வேலி நகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

நான்குனேரி மாணவரை மீண்டும் தாக்கியவர்கள் யார்? காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவர், மர்ம நபர்களால் மீண்டும் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்து... மேலும் பார்க்க

அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க

நெல்லையில் தாக்கப்பட்ட மேளக் கலைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் இருவருக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்த மேளக்கலைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி நகரம் தெற்கு ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ர... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நான்குனேரி வட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தாா். பருத்திப்பாடு ஊராட்சி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியில் சேதமடைந்த 2 வீடுகள் ரூ.3 லட்சம் ச... மேலும் பார்க்க

தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதிய... மேலும் பார்க்க