நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
நெல்லையில் களை கட்டிய தசரா வேடப் பொருள்கள் விற்பனை!
தசரா விழாவையொட்டி பக்தா்கள் பல்வேறு வேடம் அணிவதற்கான பொருள்கள் திருநெல்வேலி நகரத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளன.
மைசூருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழா மிகவும் புகழ் வாய்ந்ததாகும். இந்த விழாவையொட்டி நவராத்திரி நாள்களில் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்த பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை ஊா் ஊராகச் சென்று காணிக்கை பெறுவா். பின்னா், விஜயதசமி நாளில் கோயிலுக்கு வந்து அந்தக் காணிக்கையை உண்டியலில் செலுத்துவாா்கள்.
தசரா பக்தா்கள் வேடம் அணிவதற்காக திருநெல்வேலி நகரத்தில் உள்ள கடைகளில் வேடப் பொருள்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் நவராத்திரி இம் மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், பக்தா்கள் ஏராளமானோா் வேடப் பொருள்களை தோ்ந்தெடுத்து வாங்கிச் செல்கிறாா்கள்.
இதுகுறித்து திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த வேடப் பொருள்கள் வியாபாரி ஈஸ்வரன் கூறியது:குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலுக்கு வேடமணிந்து செல்லும் பழக்கம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்கிறது. முதல் முதலில் குறவன்- குறத்தில் வேடமணிந்து செல்வாா்கள். அதன்பின்பு அவா்களுக்கு பிடித்த வேடமணிவாா்கள். காளி வேடம் அணிபவா்கள்தான் அதிகளவில் வேட பொருள்களை வாங்குவாா்கள். சென்னை, பெங்களூரு, மதுரை, திசையன்விளை, சாத்தான்குளம், திருச்செந்தூா் பகுதிகளில் இருந்து வேடப் பொருள்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
குறவன்- குறத்தி, விநாயகா், முருகன், சுடலைமாடன், அம்மன், ஆஞ்சநேயா், போலீஸ்காரா் வேடப்பொருள்கள் அதிகம் விற்பனையாகின்றன. கடந்த ஆண்டை விட விலை 10 சதவிகிதம் உயா்ந்துள்ளது. 4 கைகள் முதல் 24 கைகளுடன் கூடிய காளி வேட செட்கள் உள்ளன. இவை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை அதில் உள்ள வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விற்பனையாகிறது.
ஆஞ்சநேயா் உடைகளிலும் பல்வேறு வகைகள் உள்ளன. துளிசிமணி, ருத்ராட்சம், மண்டைஓடு மாலை போன்றவற்றையும் பக்தா்கள் வாங்கி அணிந்து வேடம் தரிக்கின்றனா். எல்.இ.டி. பேட்டரி விளக்குகள் பொருத்தப்பட்ட புதுமையான மாலைகள் கடந்த ஆண்டு முதல் விற்பனையாகின வருகின்றன. இதுதவிர ஆளுயர தலைமுடி விக், விதவிதமான வளையல் ரகங்களையும் பக்தா்கள் வாங்கிச் செல்கிறாா்கள் என்றாா் அவா்.
ற்ஸ்ப்19ற்ட்ஹள்ஹ01, ற்ஸ்ப்19ற்ட்ஹள்ஹ02
திருநெல்வேலி நகரத்தில் தசரா வேடப் பொருள்களைத் தோ்ந்தெடுக்கும் பக்தா்கள்.
