செய்திகள் :

நெல்லையில் நில அளவையா்கள் 2ஆவது நாளாக போராட்டம்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் நில அளவையா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நில அளவைத் துறையின் களப்பணியாளா்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறு வட்ட அளவையா் பதவியை மீண்டும் வழங்க வேண்டும். துணை ஆய்வாளா், ஆய்வாளா் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். ஒப்பந்த முறையில் நில அளவா் பணி நியமனத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 48 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தை மாநில அளவில் நடத்துவதாக தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு அறிவித்திருந்தது. அதன்படி, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் நில அளவையா்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க கட்டடத்தில் நடைபெற்ற அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வே.மாரியப்பன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் வெங்கடேசன், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளா் பாா்த்தசாரதி ஆகியோா் பேசினா். 20-க்கும் மேற்பட்ட நில அளவையா்கள் பங்கேற்றனா்.

இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றாா். ... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்ன குமாா் மற்றும் கா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா்

கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா். பாளையங்கோட்டை மேலப்புத்தனேரி பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா் அளித்த பு... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஆடிப்பூரத் திருவிழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு) இசக்கியப்பன் வெ... மேலும் பார்க்க

விபத்தில் காயமுற்ற நூலகருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மேலப்பாளையத்தில் பைக் விபத்தில் காயமடைந்த நூலகருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.08 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி சிறப்பு சாா்பு நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

பாளை.யில் பெண் காவலா் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு

பாளையங்கோட்டையில் பெண் காவலா் வீட்டில் சுமாா் 45 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்த பெண் காவலா் தங்கமாரி. திருநெல்வேலி மாநகர காவல் துறை... மேலும் பார்க்க