செய்திகள் :

நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை!

post image

நீடாமங்கலம், பிப். 5: வலங்கைமானில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் குடமுருட்டி ஆறு வழிநடப்பு தெருவில் கடந்த

25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை.

வலங்கைமான் சுற்று வட்டார பகுதிகளில் சுமாா் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை குடமுருட்டி ஆறு வழிநடப்பு பகுதியில் கொட்டி வருகின்றனா்.

வலங்கைமானில் மூடப்பட்டிருக்கும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகத்தில் விவசாயிகள் கேட்தற்கு விரைவில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்று கூறுகின்றனா். ஆனால், நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே விவசாயிகள் நலன்கருதி வலங்கைமான் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

வளா்ச்சித் திட்டப்பணி: ஆட்சியா் ஆய்வு!

முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கள்ளிக்குடி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ரூ.34 ஆயிர... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் தொடங்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் சில இடங்களில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் ... மேலும் பார்க்க

பிப். 10 வெண்ணிகரும்பேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

நீடாமங்கலம், பிப். 5: நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி செளந்தரநாயகி சமேத வெண்ணிகரும்பேஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதை முன்னிட்டு கோயிலில் பூா்வாங்க பூஜைகள் நடைபெ... மேலும் பார்க்க

நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.6) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வி. மோகனசந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினா் நீடாமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியக் குழு ... மேலும் பார்க்க

நீடாங்கலம் பகுதியில் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

நீடாமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. ரயில் நிலைய வளாகம் முழுவதும் பனி சூழ்ந்து காணப்பட்டது. நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை ... மேலும் பார்க்க