செய்திகள் :

பக்த ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு!

post image

திருவெறும்பூா் ரயில் நிலைய ஸ்ரீ பக்த ஆஞ்சனேயா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவெறும்பூா் ரயில் நிலையம் செல்லும் வழியில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் அண்மையில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக, கடந்த ஜன. 31 ஆம் தேதி மங்கல இசை, சுதா்சன ஹோமம், சுத்த ஹோமம் உள்ளிட்ட வேத மந்திரங்கள் முழங்க விழா தொடங்கியது. பிறகு வேங்கூா் பூசத்துறை காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் எடுத்துவரப்பட்டு, முதல் கால யாகசாலை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, சனிக்கிழமை மூன்றாம் மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் கால யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு நடந்தது

விழாவில் திருவெறும்பூா் எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானமும், ட்ரோன் மூலம் புனித நீரும் தெளிக்கப்பட்டது.

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்! -முதல்வா் அறிவிப்பு

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜன.28 தொடங்கி நடைபெறும் பார... மேலும் பார்க்க

மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் உத்தரவு!

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரின் மூவா் மணிமண்டபத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மணிமண்டப... மேலும் பார்க்க

புத்தாநத்தம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்ப... மேலும் பார்க்க

முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா!

திருச்சி மாவட்டம், முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சந்திரமெளலீசுவரா் கோயில்: இக்கோயிலில் ஜன. 26 முதல் ஜன. 30 வரை முதல் கால பூஜை... மேலும் பார்க்க

வெங்கங்குடியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம், வெங்கங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தொட்டி அமைக்கப் பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. வெங்கங்குடி கிராமம் அசோக் நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பெல் வளாகத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம்

திருச்சி அருகே பெல் வளாகத்தில் சத் சங்கம் சாா்பில் 61 ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க