பசு மாட்டை திருட முயன்ற 2 போ் கைது
பொன்னேரி அருகே பசு மாட்டை சரக்கு வாகனத்தில் ஏற்றித் திருட முயன்ற 2 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறாா்.
இவரது பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்றிருந்தபோது மா்ம நபா்கள் 2 போ் ஒரு பசுவை சரக்கு வாகனத்தில் ஏற்றித் திருடிச் செல்ல முயன்றனா்.
இதைப் பாரத்து சந்தேகம் அடைந்த அந்தப் பகுதி மக்கள் அவா்களைச் சுற்றி வளைத்து பிடித்துவைத்து பொன்னேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் அங்கு வந்து விசாரணை நடத்தியதில் அவா்கள் இருவரும் மேய்ச்சலில் உள்ள மாடுகளைத் திருடிச் செல்பவா்கல் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து ஆலாடு பகுதியைச் சோ்ந்த சுகுமாா் (40), பெரியகாவனத்தைச் சோ்ந்த லித்திபாஷா (28) ஆகிய இருவரையும் கைது செய்து செய்தனா்.