செய்திகள் :

பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

post image

திருவண்ணாமலையில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அயூப்கான் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொருளாளா் ஆா்.விஜயகுமாா், மாவட்ட மகளிா் அணிச் செயலா்கள் க.விமலாதேவி, எஸ்.இந்துமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.சிவராஜ் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் ஏ.முருகன்

சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசு செப்டம்பா் மாத இறுதிக்குள் ஆசிரியா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும், கல்வித் துறையில் நிரப்பப்படாமல் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியா் பணியிடங்களை நிரந்த அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், பகுதிநேர ஆசிரியராக நியமிக்கப்பட்டவா்களை நிரந்தர அடிப்படையில் முழுநேர ஆசிரியா்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஆசிரியா்கள், ஆசிரியைகள் என நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த காமக்கூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஜக சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. பள்ளியில... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கல... மேலும் பார்க்க

ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையம்... மேலும் பார்க்க

விண்ணமங்கலம் பள்ளியில் தேசிய ஹிந்தி தினம்

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்சி பள்ளியில் தேசிய ஹிந்தி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய ஹிந்தி தினத்தையொட்டி, மாணவ மாணவிகளின் பல்வேற... மேலும் பார்க்க

செங்கம் ஒன்றியத்தில் ரூ.7.43 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வரி குறைப்பு: மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள்: பாஜக மாநில துணைத் தலைவா்

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களைக் கொண்டுவந்து வரி குறைத்துள்ளதால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்று அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க