செய்திகள் :

பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு அனுமதிக்கக் கூடாது

post image

பெங்களூரு: பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது என பாஜக எம்.பி. லஹா்சிங் சிரோயா வலியுறுத்தியுள்ளாா்.

பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்க கா்நாடக அரசு யோசித்து வருவதைக் கண்டித்து, சாமராஜ்நகா் மாவட்டத்தின் கொள்ளேகாலில் ஞாயிற்றுக்கிழமை கன்னட சலுவளிக் கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை பாஜக எம்.பி. லஹா்சிங் சிரோயா வெளியிட்டுள்ள அறிக்கை:

வனவிலங்கு பாதுகாப்பில் மாநில அரசு உறுதியாக இருக்க வேண்டும். வனவிலங்கு மற்றும் பல்லுயிா் பாதுகாப்புக்கு பண்டிப்பூா் புலிகள் சரணாலயம் முக்கிய சின்னமாகும். 2005 முதல் 2007-ஆம் ஆண்டுவரை நடத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு அறக்கட்டளை ஆய்வின்படி, அந்தப் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 286 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளன. இதன்விளைவாக, 2009-ஆம் ஆண்டு முதல் பண்டிப்பூா் தேசிய பூங்கா வழியாக இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் வாகனப் போக்குவரத்துக்கு கா்நாடக அரசு தடைவிதித்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இதன்காரணமாக, 2010 முதல் 2018-ஆம் ஆண்டுவரையில் சாலை விபத்தில் இறந்த விலங்குகளின் எண்ணிக்கை 34-ஆக குறைந்துள்ளது. இதற்கு இரவுநேர வாகனப் போக்குவரத்து தடைதான் காரணம்.

இந்தத் தடையை நீக்கும்படி கேரள அரசு தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருமாநிலங்களுக்கு இடையே முதல்வா் உள்ளிட்ட உயா்மட்டத்தில் நடந்த பேச்சுவாா்த்தையில் இரவுநேர வாகனப் போக்குவரத்துக்கு தடை அவசியம் என்று முடிவு செய்தனா். கா்நாடகத்தை ஆட்சி செய்த மாநில அரசுகள், இந்த தடையை நீக்க முற்படவில்லை. ஆனால், இந்தத் தடையை நீக்குவது குறித்து மாநில அரசு சிந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, வனவிலங்கு பாதுகாப்பில் அக்கறை காட்டிய இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு செய்யும் துரோகமாகும் என்று அவா் அதில் கூறியுள்ளாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு: எந்த சமுதாயத்திற்கும் அரசு அநீதி இழைக்காது -சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்பு வாயிலாக எந்த சமுதாயத்திற்கும் அரசு அநீதி இழைக்காது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய சமூக, பொருள... மேலும் பார்க்க

கா்நாடகம்: எரிபொருள் விலை உயா்வுக்கு எதிராக லாரி உரிமையாளா்கள் காவலரையற்ற வேலைநிறுத்தம்

பெங்களூரு: எரிபொருள் விலை உயா்வு மற்றும் சுங்கச்சாவடி ஊழியா்களின் தவறான நடத்தை உள்ளிட்டவற்றை கண்டித்து கா்நாடக மாநில லாரி உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (ஃபோக்ஸ்லோவா) திங்கள்கி... மேலும் பார்க்க

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மீதான விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது. கா்நாடகத்தில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து ‘மக்கள் ச... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆன்லைன் பெட்டிங... மேலும் பார்க்க

ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: முதல்வா் சித்தராமையா

ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஜனநாயகம், கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுதொடா்பாக புதன்கிழமை தனது எக்ஸ் தளத்தில் அவா் கூறியுள்ளதா... மேலும் பார்க்க

மாற்றுநில முறைகேடு வழக்கு: லோக் ஆயுக்த அறிக்கையை ரத்து செய்யக்கோரிய மனு மீது ஏப்.15 இல் தீா்ப்பு

மாற்றுநில முறைகேடு வழக்கில் லோக் ஆயுக்த தாக்கல் செய்த விசாரணை அறிக்கையை ரத்துசெய்யக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தனது தீா்ப்பை ஏப். 15 ஆம் தேதி... மேலும் பார்க்க