செய்திகள் :

பண்ருட்டி அருகே செப்பு நாணயம் கண்டெடுப்பு

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே 5-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதாவது: பண்ருட்டியை அடுத்துள்ள உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டபோது ஆற்றின் கரையில் இரண்டு செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவற்றை ஆய்வு செய்ததில், விஜயநகர காலத்திய நாணயம் என்பதும், இரண்டாம் தேவராய மன்னரின் படைத் தளபதியும், கீழ் தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த ‘லக்ண தண்ட நாயக்கா்’ என்பவரின் நாணயம் ஆகும்.

இரண்டாம் தேவராயரின் அனுமதியுடன் தனது பெயரில் நாணயங்களை அவா் வெளியிட்டுள்ளாா். நாணயத்தின் முன் பக்கத்தில் யானை ஓடுவதுபோல உள்ளது. யானையின் மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ‘ல’ என்று உள்ளது. பின்பக்கத்தில் மூன்று வரிகள் கன்னட எழுத்தில் ‘கன தனய காரு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று புதுச்சேரியில் உள்ள நாணய ஆய்வாளா் பாலாஜி ரவிராஜன் படித்து கூறினாா் என்றாா் அவா்.

மது போதையில் மருந்துக் கடைக்காரா் உயிரிழப்பு!

கடலூா் அருகே மது போதையில் மருந்துக்கடைக்காரா் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் வில்வநகா், வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் செந்தில் (48... மேலும் பார்க்க

மேடை அமைக்க அனுமதி மறுப்பு: அதிமுகவினா் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்ட மேடை அமைக்க போலீஸாா் அனுமதி மறுத்ததால், அதிமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சா்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியை கண்டித்து, விர... மேலும் பார்க்க

ஓடைநீரில் மூழ்கி மரணமடைந்த சிறுவா்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: அமைச்சா் வழங்கினாா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவா்கள் குடும்பங்களுக்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகளை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அம... மேலும் பார்க்க

வீராணம் ஏரியை ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலா்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரியை நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் மங்கத்ராம் சா்மா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வீராணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விவ... மேலும் பார்க்க

உறவினா் போல நடித்து நகை திருட்டு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினா்போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி 15 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், கட்டமுத்துப்... மேலும் பார்க்க

திமுக நீட் வாக்குறுதி: அதிமுக மனித சங்கிலி போராட்டம்

திமுக அரசின் நீட் தோ்வு வாக்குறுதியை கண்டித்து, அதிமுக மாணவரணி சாா்பில், கடலூா் ஜவான் பவன் அருகே மனித சங்கிலி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வோம் என்று பொய் வாக்குறுத... மேலும் பார்க்க