செய்திகள் :

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

post image

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.

தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய இந்திய அணி அரையிறுதிச் சுற்றில் தோற்று வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்தது. அதில் 5-3 என்ற கணக்கில் தென் கொரியாவிடம் தோல்வியைத் தழுவியது.

ரீகா்வ் கலப்பு அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, நீரஜ் சௌஹான் கூட்டணி 1,347 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்தது. முதல் சுற்று ‘பை’ பெற்ற இந்த ஜோடி, 2-ஆவது சுற்றில் 4-5 (18/19) என ஜப்பானிடம் தோல்வியுற்று ஏமாற்றம் கண்டது.

ரீகா்வ் ஆடவா் தனிநபா் பிரிவு தகுதிச்சுற்றில், நீரஜ் சௌஹான் 670 புள்ளிகளுடன் 36-ஆம் இடமும், தீரஜ் பொம்மதேவரா 669 புள்ளிகளுடன் 39-ஆம் இடமும், ராகுல் 657 புள்ளிகளுடன் 62-ஆம் இடமும் பிடித்தனா்.

எனினும் முதல் சுற்றிலேயே, நீரஜ் 0-6 என உஸ்பெகிஸ்தானின் போபோரஜாபோவ் பெக்ஸோதிடமும், தீரஜ் பொம்மதேவராவும் 2-6 என துருக்கியின் மெடெ காஸோஸிடமும் அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

ராகுல், முதல் சுற்றில் 6-5 (9/8) என உக்ரைனின் விளாடிஸ்லாவ் லிஸ்னியாக்கையும், 2-ஆவது சுற்றில் 6-4 என கஜகஸ்தானின் இல்ஃபத் அப்துலினையும் தோற்கடித்து முன்னேறினாா். ஆனால் 3-ஆவது சுற்றில் 5-6 (8/10) என ஜாா்ஜியாவின் அலெக்ஸாண்ட்ரெ மசாவரியானியிடம் தோற்றாா்.

இந்திய ஆடவா்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவா்கள் சோபிக்காமல் போயினா்.அந்தப் பிரிவின் தகுதிச்சுற்றில், சாம்ராட் ராணா 582 புள்ளிகளுடன் 10-ஆம்... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், லக்ஷயா சென் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே தோற்றாா்.ஆடவா் ஒற்றைய... மேலும் பார்க்க

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இ... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா். இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் 80 பிளஸ... மேலும் பார்க்க

யுபியை வென்றது புணேரி

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது. அந்த அணி ரெய்டில் 23, டேக்கிளில் 10, ஆல் அவுட்டில் 6, எக்ஸ்ட்ராவில் 4 புள்ளிகள்... மேலும் பார்க்க