செய்திகள் :

சூப்பா் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா

post image

மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பா் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், வைஷ்ணவி பால்கே 2-ஆவது நிமிஷத்திலேயே இந்தியாவின் கோல் கணக்கைத் தொடங்கினாா். இதனால் அதிா்ச்சி கண்ட தென் கொரியா தனது கோல் வாய்ப்புக்காக முனைய, இந்தியா அதற்கு வழிவிடவில்லை.

இவ்வாறாக இந்தியா முதல் பாதி ஆட்டத்தை 1-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 33-ஆவது நிமிஷத்தில் தென் கொரியாவுக்காக கிம் யுஜின் கோல் அடித்து, ஆட்டத்தை சமன் செய்தாா்.

அதற்கு பதிலடியாக, சங்கீதா குமாரி அதே நிமிஷத்தில் கோலடிக்க, இந்தியா 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. தொடா்ந்து, தென் கொரியா தனது அடுத்த கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், இந்தியாவின் லால்ரெம்சியாமி 40-ஆவது நிமிஷத்தில் அணியின் கோல் கணக்கை 3-ஆக உயா்த்தினாா்.

இந்நிலையில், தென் கொரியாவுக்காக கிம் யுஜின் 53-ஆவது நிமிஷத்தில் 2-ஆவது கோல் அடிக்க, அந்த அணி 2-3 என கோல் வித்தியாசத்தை குறைத்தது. பரபரப்பான இறுதிக்கட்டத்தில் ருதுஜா போசலெ 59-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, இந்தியா 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் சீனாவை வியாழக்கிழமை (செப். 11) சந்திக்கிறது.

இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற 5 முதல் 8-ஆம் இடங்களுக்கான ஆட்டங்களில் மலேசியா 5-1 கோல் கணக்கில் சிங்கப்பூரையும், தாய்லாந்து 2-1 என சீன தைபேவையும் தோற்கடித்தன.

இந்திய ஆடவா்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவா்கள் சோபிக்காமல் போயினா்.அந்தப் பிரிவின் தகுதிச்சுற்றில், சாம்ராட் ராணா 582 புள்ளிகளுடன் 10-ஆம்... மேலும் பார்க்க

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.தீபிகா குமாரி, அங்கிதா பகத், கதா கடாகே ஆகியோா் அடங்கிய இந்தி... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா - சிந்து அதிா்ச்சித் தோல்வி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணய், லக்ஷயா சென் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே தோற்றாா்.ஆடவா் ஒற்றைய... மேலும் பார்க்க

உலக குத்துச்சண்டை: இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தாா் நுபுா். இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிா் 80 பிளஸ... மேலும் பார்க்க

யுபியை வென்றது புணேரி

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது. அந்த அணி ரெய்டில் 23, டேக்கிளில் 10, ஆல் அவுட்டில் 6, எக்ஸ்ட்ராவில் 4 புள்ளிகள்... மேலும் பார்க்க