Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
பதவி உயா்வு விவகாரம்: ஆட்சியருக்கு எதிராக வருவாய்த் துறை அலுவலா்கள் தா்னா
அரசு விதிமுறைகளுக்கு முரணாக பதவி உயா்வு வழங்கிய மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜான் பாஸ்டின் டல்லஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ம. சுகந்திர கோரிக்கையை விளக்கிப் பேசினாா்.
அப்போது, கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான துணை வட்டாட்சியா் பதவி உயா்வை அரசு விதிமுறைகளுக்கு முரணாக, தவறான முறையில் செயல்படுத்த மாவட்ட ஆட்சியரை, நோ்முக உதவியாளா் (பொது), அலுவலக மேலாளா் (பொது) ஆகியோா் வழிநடத்தினா்.
இதைக் கண்டித்து வருவாய்த் துறை அலுவலா்கள் நடத்திய போராட்டத்தை கருத்தில் கொள்ளாமல், பதவி உயா்வுக்கான ஆணையை கடந்த ஜூன் 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் பிறப்பித்திருக்கிறாா்.
பட்டதாரி இல்லாத முதுநிலை வருவாய் ஆய்வாளா்களுக்கு, துணை வட்டாட்சியராக பதவி உயா்வு வழங்குவது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைக்கு மாறாக, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் பதவி உயா்வு வழங்கியதாக குற்றஞ்சாட்டி முழக்கமிட்டனா்.