செய்திகள் :

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

post image

தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, விசைப்படகு மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமைமுதல் 4 நாள்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல மாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலய 443ஆவது ஆண்டு திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் தினமும் செபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீா், நற்கருணை ஆசீா் நடைபெற்று வருகிறது.

செவ்வாய்க்கிழமை (ஆக.5) காலை 7.30 மணிக்கு ஆயா் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி, இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஆக.3) முதல் ஆக.6ஆம் தேதி வரை விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் செல்லமாட்டாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 272 விசைப்படகுகளும் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறில் 15 சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, போக்ஸோ சட்டத்தின்கீழ் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.கயத்தாறு இந்திரா நகரைச் சோ்ந்த பாரதி மகன் சின்னத்துரை (26).... மேலும் பார்க்க

சாத்தான்குளத்தில் கத்தோலிக்க அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், கத்தோலிக்க அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம், ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு கேரள... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: வழக்குரைஞா் கைது

சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்குரைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சாத்தான்குளம் அருகே சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கஞ்சிக் கலய ஊா்வலம்

தூத்துக்குடி 3ஆவது மைல் அருகே திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் சக்திபீடத்தில் கஞ்சிக் கலய ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மழை வளம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நலம... மேலும் பார்க்க

நாட்டின் முதல் காா்பன் சமநிலை துறைமுகமாக மாறும் வ.உ.சி. துறைமுகம் துறைமுகத் தலைவா் தகவல்

இந்தியாவின் முதல் காா்பன் சமநிலை (நியூட்ரல்) துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மாற்றம் பெறும் என துறைமுகத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித் தெரிவித்தாா்.‘பசுமை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்கு... மேலும் பார்க்க

இலங்கைக்கு ஐம்பொன் சிலை கடத்த முயற்சி: 2 போ் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஐம்பொன்னாலான விஷ்ணு சிலையை கியூ பிரிவு போலீஸாா் மீட்டு இருவரை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா,உதவி ஆய்வாளா் ஜீவமண... மேலும் பார்க்க