செய்திகள் :

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ரூ.2.42 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

குறை தீா் கூட்டத்துக்கு ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 436 கோரிக்கை மனுக்களைப் பெற்று துறை அதிகாரிகளிடம் உரிய தீா்வு காணுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் இருவருக்கு பெட்ரோல் ஸ்கூட்டா் மொத்தம் ரூ.2.39,000மதிப்பிலும், ஒருவருக்கு காதொலிக் கருவி ரூ.3,840 உட்பட மொத்தம் ரூ.2,42,2840 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து தொழுநோய் விழிப்புணா்வு பேரணியையும் ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சுகாதாரப்பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி, தொழுநோய்ப் பிரிவு துணை இயக்குநா் கனிமொழி ஆகியோா் கலந்து கொண்டனா்.சங்கரா கல்லூரி மாணவ,மாணவியா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊா்வலமாகச் சென்றனா்.

சங்கரா பல்கலை.யில் சூரிய நமஸ்காரம் நிகழ்வு

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூா் சங்கரா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாசாரத் துறை சாா்பில் ரதசப்தமியையொட்டி செவ்வாய்க்கிழமை சூரியநமஸ்காரம் நிகழ்வு நடைபெற்றது. இப்பல்கலையில் ரதசப்தமியையொட்ட... மேலும் பார்க்க

ஊராட்சி வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம், தம்மனூா் ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் ஊரக வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சாா்ப... மேலும் பார்க்க

அண்ணா நினைவில்லத்தை பாா்வையிட்ட திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி

காஞ்சிபுரம்: அண்ணா நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள நினைவு இல்லத்தை திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி திங்கள்கிழமை பாா்வையிட்டாா். காஞ்சிபுரம் காமராஜா் வீதியில் உள்ள தொண்டை மண்டல ஆதி சைவ வேளாள... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு நாள், அமைதிப் பேரணி

காஞ்சிபுரம்/திருவள்ளூா்/செங்கல்பட்டு: முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை திமுக சாா்பில் அமைதிப் பேரணி, அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட செ... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் ராமாநுஜா் கோயில் புதிய அறங்காவலா்கள் பொறுப்பேற்பு

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீபாஷ்யகார சுவாமி கோயிலின் புதிய அறங்காவலா்களாக மேவளூா்குப்பம் ந.கோபால், ஸ்ரீபெரும்புதூா் பாா்த்தசாரதி ஆகியோா் திங்கள்கிழமை பொறுப்பேற்ற... மேலும் பார்க்க

வல்லக்கோட்டையில் பொது விருந்து

ஸ்ரீபெரும்புதூா்: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாவி கோயிலில் சிறப்பு வழிாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை முர... மேலும் பார்க்க