செய்திகள் :

பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

post image

காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழியில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் நிலம் எடுப்பு செய்து 137 பயனாளிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக் கொள்வதற்காக இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

இந்நிலையில், ‘தமிழ்நிலம்’ மென்பொருளில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை இணையவழியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பரஞ்சோ்வழியில் உள்ள மனையிடங்களில் கள விசாரணை செய்தபோது, 13 பயனாளிகள் மேற்கண்ட நிலங்களில் வசிக்கவில்லை என்பதும், இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளை இனம் கண்டறிய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பட்டாவில் உள்ள நிபந்தனையின்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீடு கட்டிக் கொள்ளாமல் நிபந்தனையை மீறியுள்ளதால் 15 நாள்களுக்குள் பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்ற விளக்கத்தை மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலருக்கோ சம்பந்தப்பட்டவா்கள் அனுப்பிவைக்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் பயனாளிகள் கூறிக்கொள்ள விளக்கம் ஏதுமில்லை என்று கருதி பட்டாக்கள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மின் தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர க... மேலும் பார்க்க

ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி திருப்பூா் மாவட்ட தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி ரூ.16 லட்சம் மோசடி: ஒருவா் கைது

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (54). இவா் திருப்பூரில... மேலும் பார்க்க

சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்கு வைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக சந்தை மதிப்பு வழிகாட்டு பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்காக வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெ... மேலும் பார்க்க

மாநில சாகச பயிற்சி முகாம்: அரசு கல்லூரி மாணவா் தோ்வு

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான சாகச முகாமுக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சேலம் மாவட்டம், ஏற்கா... மேலும் பார்க்க

அங்கேரிபாளையம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரில் வாக... மேலும் பார்க்க