செய்திகள் :

மாநில சாகச பயிற்சி முகாம்: அரசு கல்லூரி மாணவா் தோ்வு

post image

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான சாகச முகாமுக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மாநில அளவிலான சாகச பயிற்சி முகாம் மாா்ச் 1 -ஆம் தேதி தொடங்கி மாா்ச் 5- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து 120 போ் பங்கேற்கவுள்ளனா்.

முகாமில், மலையேற்றம், மலைகளில் நடைப்பயிற்சி, டிரக்கிங், கூடாரம் அமைத்தல் போன்ற பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதில், பங்கேற்க பாரதியாா் பல்கலைகழகத்தில் இருந்து 9 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில், திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு-2 மாணவா் நவீன்குமாரும் (விலங்கியல் துறை) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

அவரை, கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன், நாட்டு நலப் பணித் திட்ட அலகு - 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள் ஆகியோா் வாழ்த்தி வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தனா்.

விவசாயிகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மின் தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர க... மேலும் பார்க்க

ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி திருப்பூா் மாவட்ட தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி ரூ.16 லட்சம் மோசடி: ஒருவா் கைது

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (54). இவா் திருப்பூரில... மேலும் பார்க்க

சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்கு வைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக சந்தை மதிப்பு வழிகாட்டு பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்காக வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெ... மேலும் பார்க்க

அங்கேரிபாளையம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரில் வாக... மேலும் பார்க்க