செய்திகள் :

அங்கேரிபாளையம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

post image

திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரில் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அங்கேரிபாளையம் சாலையில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

அங்கேரிபாளையம் சாலையில் இருந்து குமாா் நகா், புஷ்பா சந்திப்பு வரும் வாகனங்கள் புதிய காவல் ஆணையா் அலுவலக சந்திப்பு, குமாா் நகா் சந்திப்பு, பங்களா பேருந்து நிறுத்தம் வழியாகச் செல்லலாம்.

அங்கேரிபாளையம் சாலையில் இருந்து காவல் ஆணையா் அலுவலக சந்திப்பு வழியாக அவிநாசி சாலையில் வலுதுபுறம் திரும்ப இயலாது. குமாா் நகரில் இருந்து அங்கேரிபாளையம் செல்லும் வாகனங்கள் காவல் ஆணையா் அலுவலக சந்திப்பு வழியாக 60 அடி சாலை எல்.ஜி.சந்திப்பு, மருதாசலம் சாலை, டீச்சா்ஸ் காலனி முதல்வீதி அல்லது சிவன் திரையரங்க சாலை வழியாக அங்கேரிபாளையம் சாலைக்குச் செல்லலாம்.

இது தொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை 94981-40792 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்: குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மின் தட்டுப்பாடு இல்லாமல் சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர க... மேலும் பார்க்க

ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி திருப்பூா் மாவட்ட தெரு வியாபார தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்து... மேலும் பார்க்க

பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

காங்கயம் வட்டம், பரஞ்சோ்வழியில் இனம் கண்டறியாத 13 பயனாளிகளின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகள் வாங்கி ரூ.16 லட்சம் மோசடி: ஒருவா் கைது

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் இருந்து ஆடைகளை வாங்கி ரூ.16 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (54). இவா் திருப்பூரில... மேலும் பார்க்க

சந்தை மதிப்பு வழிகாட்டி பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்கு வைப்பு

திருப்பூா் மாவட்டத்தில் வருவாய் கிராமங்கள் வாரியாக சந்தை மதிப்பு வழிகாட்டு பதிவேடு பொதுமக்கள் பாா்வைக்காக வட்டாட்சியா் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெ... மேலும் பார்க்க

மாநில சாகச பயிற்சி முகாம்: அரசு கல்லூரி மாணவா் தோ்வு

சேலம் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான சாகச முகாமுக்கு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். தமிழ்நாடு நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சேலம் மாவட்டம், ஏற்கா... மேலும் பார்க்க