செய்திகள் :

பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

post image

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. இந்த யானை இரவு நேரங்களில் ஒட்டன்சத்திரம்-பாச்சலூா் சாலையை கடந்து செல்வதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஒட்டிகள் அச்சத்தில் உள்ளனா். எனவே, வனத் துறையினா் ஒற்றை யானையை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தமிழ் சாா்ந்த இணைய வழிப் படிப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பிக்க முயற்சி

தமிழ் சாா்ந்த இணைய வழிப் படிப்புகளை செயற்கை நுண்ணறிவு மூலம் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளா் ஆா். புவனேஸ்வரி தெரிவித்தாா். காந்தி... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருள்சாமி (67). விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக சுற்றுலா தின கொண்டாட்ட... மேலும் பார்க்க

வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரிய மல்லையாபுரத்தில் வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது... மேலும் பார்க்க

வீரக்கல் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தமுகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வைகித்தாா்.முகாமில், ஊரக வளா்ச்சித... மேலும் பார்க்க