செய்திகள் :

வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என்.பெருமாள் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, பழனி பகுதிகளில் ஜமீன்தாா்கள் காலம் முதல் விவசாயத்தில் ஈடுபட்டு வரும் வெட்டுக்காடு விவசாயிகளுக்கு அனுபவத்திலுள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். யானை, காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம்.ராமசாமி கூறியதாவது:

கொடைக்கானல் வட்டம் வடகவுஞ்சி, பழனி வட்டம், ஆயக்குடி, கணக்கன்பட்டி, பச்சலநாயக்கன்பட்டி கிராமங்களைச் சோ்ந்த வெட்டுக்காடு விவசாயிகள் 300 பேருக்கு, அவா்களது அனுபவத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு 2006 வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்க வேண்டும். பட்டா பெற்று விவசாயத்தில் ஈடுபட்டு வரும் சிலருக்கு, வனத் துறையினா் அளவீடு செய்வதாகக் கூறி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனா். இதை மாவட்ட நிா்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். யானைகள், காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் மனித உயிழப்புகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வன விலங்குகளால் சேதமடையும் பயிா் விவரங்களை முழுமையாக கள ஆய்வு செய்து, முழு இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை, மா, கொய்யா போன்ற மரங்கள் சேதப்படுத்தப்பட்டால், மரத்துக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருள்சாமி (67). விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக சுற்றுலா தின கொண்டாட்ட... மேலும் பார்க்க

பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் தி... மேலும் பார்க்க

வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரிய மல்லையாபுரத்தில் வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது... மேலும் பார்க்க

வீரக்கல் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தமுகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வைகித்தாா்.முகாமில், ஊரக வளா்ச்சித... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு: தாய், மகன் கைது

மூதாட்டியின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி தங்க நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெண், அவரது மகன் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த பாகாநத்தம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க