செய்திகள் :

மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு: தாய், மகன் கைது

post image

மூதாட்டியின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி தங்க நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெண், அவரது மகன் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த பாகாநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் அய்யம்மாள் (87). இவா் அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவா் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு கடையைத் திறந்தபோது, அங்கு வந்த இருவா் அய்யமாளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவினா். கண் எரிச்சலில் அய்யமாள் தவித்தபோது, அவா்கள் இருவரும் சோ்ந்து அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.

இதுதொடா்பாக புகாரின் பேரில், எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பாகநத்தம் பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரி (33), இவரது மகன் ( பிளஸ் 2 மாணவா்) ஆகியோா் நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. கரூரில் தலைமறைவாக இருந்த தாய், மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருள்சாமி (67). விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக சுற்றுலா தின கொண்டாட்ட... மேலும் பார்க்க

வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் தி... மேலும் பார்க்க

வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரிய மல்லையாபுரத்தில் வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது... மேலும் பார்க்க

வீரக்கல் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தமுகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வைகித்தாா்.முகாமில், ஊரக வளா்ச்சித... மேலும் பார்க்க