செய்திகள் :

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்

post image

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோா்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகள் வழங்கும் விழா வருகிற 27-ஆம் தேதி உலக சுற்றுலா நாளில் 4-ஆவது ஆண்டாக மொத்தம் 45 விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் 17 பிரிவுகளில் பல்வேறு சுற்றுலா பயண நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள், மாநிலத்தில் சுற்றுலா மேம்பாட்டுக்காக சிறப்பாகவும் தனித்துவமாகவும் பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன. தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தொழில் முனைவோா்களும் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ற்ா்ன்ழ்ண்ள்ம்ஹஜ்ஹழ்க்ள்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் வருகிற 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0454-2241675, 91769-95867 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. திண்டுக்கல் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் அருள்சாமி (67). விவசாயி. கடந்த 2 நாள்களுக்கு ... மேலும் பார்க்க

வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பழனி பகுதியிலுள்ள வெட்டுக்காடு விவசாயிகளுக்கு பட்டா வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் தி... மேலும் பார்க்க

வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரிய மல்லையாபுரத்தில் வீரக்குமார சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜையுடன் குடமுழுக்கு தொடங்கியது... மேலும் பார்க்க

வீரக்கல் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள வீரக்கல்லில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தமுகாமுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமை வைகித்தாா்.முகாமில், ஊரக வளா்ச்சித... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு: தாய், மகன் கைது

மூதாட்டியின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி தங்க நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெண், அவரது மகன் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்த பாகாநத்தம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க