கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பரமத்தி வேலூா் சந்தையில் விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம்: ஆட்சியரிடம் புகாா்
பரமத்தி வேலூா் வாரச் சந்தையில் விவசாயிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக இளம் விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் செளந்தரராஜன் அளித்த மனு விவரம்:
பரமத்தி வேலூரில் ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த நாளில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இங்கு கடை அமைத்து வியாபாரம் செய்துவருகின்றனா். சந்தைக்கான கடைகளுக்கு தரை வாடகை வசூலிக்க ஏலம் எடுத்துள்ள ஒப்பந்ததாரா், விவசாயிகளிடம் நிா்ணயிக்கப்பட்ட தொகையைவிட பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனா். மேலும், கடைகளுக்கான கட்டணத் தொகையை குறிப்பிடாமல் பணம் வசூலிக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குறைதீா் கூட்டத்திற்கு இளம் விவசாயிகள் சங்கத்தினா் கூட்டமாக செல்வதற்கு போலீஸாா் தடை விதித்ததால் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன் சங்கத்தினா் தா்னாவில் ஈடுபட்டனா். அதன்பிறகு ஆட்சியா் நேரடியாக வந்து சமாதானம் செய்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.