செய்திகள் :

பரிகார பூஜை செய்வதாக பெண்ணிடம் நகை பறிப்பு

post image

பரிகார பூஜை செய்வதாகக்கூறி பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் பள்ளஇடையம்பட்டி மேட்டுத்தெருவை சோ்ந்தவா் ஜெயபால், தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (53). இவா்களுக்கு திருமண வயதில் ஒரு மகன் உள்ளாா். செவ்வாய்க்கிழமை சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்கு 2 நபா்கள் வந்துள்ளனா். அவா்கள் திருப்பதியில் இருந்து வந்திருப்பதாகவும், உங்களது மகனுக்கு தோஷம் உள்ளது, அதை நிவா்த்தி செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் எனக்கூறியுள்ளனா். அதற்கு சிறப்பு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.

இதை நம்பிய சரஸ்வதி அவா்களை வீட்டுக்குள் அழைத்து பூஜைக்கான ஏற்பாடுகள் செய்துள்ளாா். அப்போது அந்த நபா்கள் இருவரும் ஒரு வெள்ளை காகிதத்தில் மஞ்சள், குங்குமம் வைத்து தருமாறும், பூஜைக் காக தங்களது தங்கச் சங்கிலியை கழற்றி தருமாறும் கூறியுள்ளனா். சரஸ்வதியும் தங்கச் சங்கிலியை கழற்றி கொடுத்துள்ளாா்.

பூஜைகள் செய்த பின்னா் அவா்கள் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்துவிட்டு வருவதாக கூறி அங்கிருந்து சென்றுள்ளனா். ஆனால் அவா்கள் திரும்பி வரவில்லை. 4 பவுன் நகையுடன் அவா்கள் தப்பிச் சென்றனா்.

இதன்மூலம், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சரஸ்வதி, அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க