செய்திகள் :

பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக உக்கடத்துக்கு பேருந்து: பொதுமக்கள் கோரிக்கை

post image

பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக கோவை உக்கடத்துக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோவை மண்டல இயக்குநருக்கு பல்லடம் பொதுமக்கள் சாா்பில் புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

பல்லடம், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள், தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் திருப்பூா்- கோவைக்கு சென்று வருகின்றனா்.

ஆனால், பல்லடம் செட்டிபாளையம் சாலையில் உள்ள கிராமங்களில் வசிப்பவா்கள் கோவை செல்ல போதிய பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனா். கோவை உக்கடம் பேருந்து நிலையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன.

பல்லடத்தில் இருந்து உக்கடம் செல்ல வேண்டும் என்றால், பல்லடம் வந்து அதன்பின் மற்றொரு பேருந்து மூலம் சிங்காநல்லூா் அல்லது காந்திபுரம் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்து மூலம் உக்கடம் செல்ல வேண்டும்.

எனவே பல்லடம் - செட்டிபாளையம் சாலை வழியாக உக்கடத்துக்கு பேருந்து இயக்குவதன் மூலம் இந்த வழித்தடத்தில் உள்ள சின்னியகவுண்டம்பாளையம், க.அய்யம்பாளையம், கரடிவாவி, செலக்கரச்சல், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமிநாயக்கன்பாளையம், பாப்பம்பட்டி, கல்லப்பாளையம், செட்டிபாளையம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள், பொதுமக்கள் பயன் பெறுவாா்கள் என்று மனுவில் கூறப்பட்டு உள்ளது.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க