பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு
கொடைக்கானல் அருகே வியாழக்கிழமை பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி கும்பரையூரைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் மகள் முத்துப்பிரியா (17). இவா் பண்ணைக்காடு பிரிவு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை வழக்கம்போல முத்துப்பிரியா பள்ளிக்குச் சென்றாா். பின்னா், மதிய உணவு இடைவேளையின் போது, வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை மாணவி சாப்பிட்டு விட்டு வகுப்பறைக்குள் சென்றாா். சிறிது நேரத்தில் வகுப்பறையிலேயே அவா் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, ஆசிரியா்கள் மாணவியை மீட்டு, பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே முத்துப்பிரியா இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து தாண்டிக்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
உடல் கூறாய்வுக்கு பிறகே மாணவியின் இறப்பு குறித்து தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.