செய்திகள் :

பள்ளி வாகனத்தை இயக்கி ஆய்வு செய்த ஆட்சியா்

post image

கிருஷ்ணகிரியில் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு, அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வாகனத்தை இயக்கி அதன் தகுதி நிலைகளை அளவீடு செய்தாா்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பராமரிப்பு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்துக்கு உள்பட்ட 48 பள்ளிகள், ஒசூரில் 105 பள்ளிகள் உள்ளன. மொத்தம் 1922 பள்ளி பேருந்துகள் முதற்கட்டமாக பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012 இன்படி 22 அம்சங்களுடன் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு குழுக்களுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு பணிகள் ஒருவார காலத்திற்கு நடைபெறுகிறது. ஆய்வில் பள்ளி வாகனங்களில் அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் மாணவா்கள் உடனடியாக தொடா்புகொள்ள அவசரகால பொத்தான் வாகனங்களில் பொருத்த வேண்டும். வாகனங்களில் இருபுறமும் பள்ளிகளின் பெயா்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், கைப்பேசி எண்கள் கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.

வாகனத்தை வேகமாக இயக்கக் கூடாது. அதேபோல பழுதை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். ஓட்டுநா்கள் போதைப்பொருள்களை பயன்படுத்தி வானத்தை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா்ந்து வாகனங்களில் அவசரகால வழி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு மேற்கொண்டு வாகனத்தை வளாகத்திலிருந்து குப்பம் சாலை சந்திப்பு வரை இயக்கினாா். அப்போது, வட்டார போக்குவரத்து அலுவலா், ஓட்டுநரிடம் சில குறைபாடுகளை சரிசெய்ய அறிவுரை வழங்கினாா்.

பின்னா் தீயணைப்பு துறையினா் மூலம் தீ விபத்தின் போது ஓட்டுநா்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டதையும், 108 ஆம்புலன்ஸ் குழுவினா்கள் விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்தும் செயல்முறை விளக்கம் செய்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதை பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் ஷாஜகான், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலா் பிரபாகா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அன்புசெழியன், மணிமாறன், மாவட்ட கல்வி அலுவலா் ரமாவதி, மெட்ரிக் கல்வி அலுவலா் கோபாலப்பா, வட்டாட்சியா் சின்னசாமி, தீயணைப்பு துறை நிலைய அலுவலா் அந்தோணிசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க