செய்திகள் :

பழனி கோயிலில் ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி

post image

பழனி கோயில் அா்ச்சகா் பயிற்சி பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளதால், விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில் நடைபெறும் அா்ச்சகா் பயிற்சிப் பள்ளி, ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகளில்

2025-2026 ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதற்க்கான அறிவிப்பை கோயில் நிா்வாகம் வெளியிட்டது.

இளநிலை அா்ச்சகா் சான்றிதழ் ஓராண்டு பயிற்சியும், ஓதுவாா் பள்ளியில் முழுநேரம் மூன்றாண்டு பயிற்சியும், பகுதிநேரம் நான்காண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இதற்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அா்ச்சகா் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 14 வயதிலிருந்து 24 வயது வரையும், ஓதுவாா் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 13 வயதிலிருந்து 20 வயது வரையும் இருக்க வேண்டும்.மேலும் இந்து மதத்தை பின்பற்றுபவா்களாக இருக்க வேண்டும் .

விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்ப படிவத்தை

ல்ஹப்ஹய்ண்ம்ன்ழ்ன்ஞ்ஹய்.ட்ழ்ஸ்ரீங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்

என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந் தோறும் முழுநேர பயிற்சிக்கு ரூபாய் பத்தாயிரமும், பகுதி நேரப் பயிற்சிக்கு ரூ. ஐந்தாயிரமும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும் தங்குமிடம், உணவு, உடை பாடப்புத்தகங்கள், நோட்டுகள், மருத்துவ வசதிகள் அனைத்தும் கோயில் மூலம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பங்களை இணை ஆணையா், செயல் அலுவலா், தண்டாயுதபாணி சுவாமி

கோயில், பழனி 624 601-என்ற முகவரிக்கு அனுப்பவும் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கொடைக்கானலில் வீட்டின் மாடிக்குச் சென்ற காட்டு மாடு

கொடைக்கானலில் வியாழக்கிழமை வீட்டின் மாடிக்கு காட்டு மாடு சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலைய... மேலும் பார்க்க

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை: 4 போ் கைது

வத்தலகுண்டில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பகுதியில் காவல் ஆய்வாளா் கௌதம் தலைமையிலான போலீஸாா் புத... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: பழனி கோயிலில் இரவு 7 மணி வரை பக்தா்கள் அனுமதி

பழனி மலைக்கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.7) இரவு 7 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்த... மேலும் பார்க்க

அருணகிரிநாதருக்கு குடமுழுக்கு

பழனி அருகேயுள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் அருணகிரிநாதருக்கு புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயிலில் கடந்த சில ஆண்டுகளாக திரு... மேலும் பார்க்க

மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

மருந்துப் பிரதிநிதிகளுக்கு சட்டப்படியான வேலை விதிமுறைகளை உருவாக்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் புனித வளானாா் மருத்துவமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாட... மேலும் பார்க்க

ரூ.78.36 லட்சத்துக்கு உறுதியான புத்தக விற்பனை!

திண்டுக்கல்லில் நடைபெறும் 12-ஆவது புத்தகத் திருவிழாவில் ரூ.78.36 லட்சத்துக்கு புத்தக விற்பனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால், பதிப்பக உரிமையாளா்கள், விற்பனையாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க