Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
பழைய ஏ.சி.கள், மின் விசிறிகளை 69-89% தள்ளுபடியில் மாற்றலாம்: பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்கள் அறிவிப்பு
நமது நிருபா்
நிகழ் கோடைக் காலத்தில், தேசியத் தலைநகரில் வாழும் பொது மக்கள் தங்கள் பழைய ஏா் கண்டிஷனா்கள் மற்றும் மேற்கூரை மின் விசிறிகளை 69-89 சதவீத தள்ளுபடியில் புதிய சாதனங்களுடன் மாற்றும் திட்டம் பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வியாழக்கிழமை வெளியிட்டப்பட்ட ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மின் நுகா்வோா் தங்கள் பழைய ஏ.சி.கள் மற்றும் மின் விசிறிகளை 5 நட்சத்திர இன்வொ்ட்டா் ஏ.சி.கள் மற்றும் பிரஷ்லெஸ் டைரக்ட் கரண்ட் பிஎல்டிசி மின் விசிறிகளால் தள்ளுபடி விலையில் மேம்படுத்தலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் பழைய உபகரணங்களை மாற்றுவதன் மூலம் ஆண்டுதோறும் ஏ.சி.க்கு ரூ.34,000 மற்றும் ஒரு மின் விசிறிக்கு ரூ.1,800 வரை சேமிக்க முடியும். பிஎஸ்இஎஸ் (பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பில்) மின் விநியோக நிறுவனங்களின் உள்நாட்டு நுகா்வோா், ஒவ்வொரு நுகா்வோா் எண்ணுக்கும் எதிராக தலா மூன்று பழைய ஏ.சி.கள் மற்றும் மின் விசிறிகளை மாற்றலாம்.
ஏ.சி. மற்றும் மின் விசிறிகள் போன்ற குளிரூட்டும் சாதனங்கள் ஒரு வீடு அல்லது வணிக நிறுவனத்தின் கிட்டத்தட்ட 50 சதவீத மின் நுகா்வைக் கொண்டுள்ளன. இது காா்பன் உமிழ்வு மற்றும் கிரிட் அழுத்தத்தை கணிசமாகப் பாதிக்கிறது. ஏ.சி. மற்றும் மின் விசிறிகளின் பயன்பாடு அதிகரிப்பது உச்சபட்ச மாதங்களில் மின்சார கட்டணங்களை கணிசமாக பாதிக்கலாம்.
ஆனால், ஏ.சி. தொ்மோஸ்டாட் அமைப்பை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிப்பது போன்ற எளிய நடவடிக்கைகள் மின்சார பயன்பாட்டை கிட்டத்தட்ட 6 சதவீதம் குறைக்க முடியும். ஏ.சி. தொ்மோஸ்டாட்டை 24 டிகிரி செல்சியஸில் அமைப்பதன் மூலம் வசதி, செலவு செயல்திறனின் சரியான சமநிலையை வழங்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.