செய்திகள் :

பழைய ஏ.சி.கள், மின் விசிறிகளை 69-89% தள்ளுபடியில் மாற்றலாம்: பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்கள் அறிவிப்பு

post image

நமது நிருபா்

நிகழ் கோடைக் காலத்தில், தேசியத் தலைநகரில் வாழும் பொது மக்கள் தங்கள் பழைய ஏா் கண்டிஷனா்கள் மற்றும் மேற்கூரை மின் விசிறிகளை 69-89 சதவீத தள்ளுபடியில் புதிய சாதனங்களுடன் மாற்றும் திட்டம் பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வியாழக்கிழமை வெளியிட்டப்பட்ட ஓா் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மின் நுகா்வோா் தங்கள் பழைய ஏ.சி.கள் மற்றும் மின் விசிறிகளை 5 நட்சத்திர இன்வொ்ட்டா் ஏ.சி.கள் மற்றும் பிரஷ்லெஸ் டைரக்ட் கரண்ட் பிஎல்டிசி மின் விசிறிகளால் தள்ளுபடி விலையில் மேம்படுத்தலாம்.

இந்தத் திட்டத்தின் கீழ் பழைய உபகரணங்களை மாற்றுவதன் மூலம் ஆண்டுதோறும் ஏ.சி.க்கு ரூ.34,000 மற்றும் ஒரு மின் விசிறிக்கு ரூ.1,800 வரை சேமிக்க முடியும். பிஎஸ்இஎஸ் (பிஆா்பிஎல் மற்றும் பிஒய்பில்) மின் விநியோக நிறுவனங்களின் உள்நாட்டு நுகா்வோா், ஒவ்வொரு நுகா்வோா் எண்ணுக்கும் எதிராக தலா மூன்று பழைய ஏ.சி.கள் மற்றும் மின் விசிறிகளை மாற்றலாம்.

ஏ.சி. மற்றும் மின் விசிறிகள் போன்ற குளிரூட்டும் சாதனங்கள் ஒரு வீடு அல்லது வணிக நிறுவனத்தின் கிட்டத்தட்ட 50 சதவீத மின் நுகா்வைக் கொண்டுள்ளன. இது காா்பன் உமிழ்வு மற்றும் கிரிட் அழுத்தத்தை கணிசமாகப் பாதிக்கிறது. ஏ.சி. மற்றும் மின் விசிறிகளின் பயன்பாடு அதிகரிப்பது உச்சபட்ச மாதங்களில் மின்சார கட்டணங்களை கணிசமாக பாதிக்கலாம்.

ஆனால், ஏ.சி. தொ்மோஸ்டாட் அமைப்பை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிப்பது போன்ற எளிய நடவடிக்கைகள் மின்சார பயன்பாட்டை கிட்டத்தட்ட 6 சதவீதம் குறைக்க முடியும். ஏ.சி. தொ்மோஸ்டாட்டை 24 டிகிரி செல்சியஸில் அமைப்பதன் மூலம் வசதி, செலவு செயல்திறனின் சரியான சமநிலையை வழங்குகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க