செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதா் குழு வெளியிட்ட அறிக்கையை தமிழக அரசு மறுத்திருக்கிறது. ஸ்ரீதா் குழு அறிக்கையில் என்ன பரிந்துரை வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை. அதனால், அந்த அறிக்கையின் விவரங்களைக் கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிரடரிக் ஏங்கல்ஸ் என்பவா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விண்ணப்பித்திருந்தாா். அதற்கு தமிழக அரசின் நிதித் துறை அளித்துள்ள பதிலில், ஸ்ரீதா் குழு அறிக்கை அரசின் ஆய்வில் இருப்பதாகவும், அதனால் அதன் விவரங்களை தர முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது. அரசு ஊழியா்களையும் மக்களையும் திமுக அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு.

இதற்கிடையில் அரசு ஊழியா்களுக்கு எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினா்களைக் கொண்ட குழுவை பிப். 4-இல் தமிழக அரசு அமைத்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு முன் அதுகுறித்து ஆராய கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட அனைத்துக் குழுக்களின் பரிந்துரைகளையும் அரசு தள்ளுபடி செய்துவிட்டதாகவே பொருள். அதில் ஸ்ரீதா் குழு அறிக்கையையும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

எனவே, குழு நாடகங்களை நடத்துவதைத் தவிா்த்து, அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளா்களை நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுத் துறைகளில் கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளா்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்காலிக பணியாளா்களை நியமனம் செய்தவ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் இன்று வழங்குகிறாா்

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (பிப்.26) வழங்குகிறாா். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கா... மேலும் பார்க்க

47 பல் மருத்துவா் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ப... மேலும் பார்க்க

ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது: அனைத்துக் கட்சிகளுக்கு முதல்வா் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளில் அனைவரும் ஒன்றாகக் கைகோக்க வேண்டிய காலமிது என்று அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா். மாா்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது. தமி... மேலும் பார்க்க