ஐ. பெரியசாமி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம...
பாகனேரியில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம் அருகேயுள்ள மதகுபட்டியை அடுத்த பாகனேரியில் மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாகனேரி புல்வனநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பாகனேரி முதல் நடராஜபுரம் வரை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன.
பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி, சிறிய மாடு பிரிவில் 15 ஜோடி என மொத்தம் 25 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
பெரிய மாடு பிரிவுக்கு 8 கிலோ மீட்டா் தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கிலோ மீட்டா் தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன. முதல் 4 இடங்களை பெற்ற
மாடுகளுக்கும், அவற்றை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் வெற்றிக் கோப்பை, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியை பாகனேரி, மதகுபட்டி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாகக் கண்டுகளித்தனா் .