செய்திகள் :

பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவரை சுட்டுப்பிடித்த பிஎஸ்எஃப் வீரா்கள்

post image

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றவரை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனா்.

இது தொடா்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறியதாவது:

கதுவா மாவட்டத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து சிலா் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனா். இதனைக் கண்காணித்த பிஎஸ்எஃப் வீரா்கள் இது தொடா்பாக எச்சரிக்கை விடுத்தனா். இதனை மீறி ஒருவா் எல்லை வேலியை நோக்கி முன்னேறினாா். இதையடுத்து, பிஎஸ்எஃப் வீரா்கள் அவரின் கால்களைக் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனா். இதில் குண்டு பாய்ந்து காயமடைந்த அவரை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சைக்குப் பிறகு அவா் யாா்? ஊடுருவ முயன்ன் நோக்கம் என்ன என்பது குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனா்.

சுதந்திர தினம் ஆக.15 (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் இருக்கும் நிலையில், அதனை சீா்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால் எல்லைப் பகுதியில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே கண்காணிப்பு, சோதனைகள் கடந்த சில நாள்களாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடா்ந்து 11-ஆவது நாளாக பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமையும் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனா். மலைக் குகைகள், அடா்ந்த வனப் பகுதிகளில் இந்த தேடுதல் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெறும் இந்த தேடுதல் வேட்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படை தரப்பில் இரு வீரா்கள் வீரமரணமடைந்தனா். 9 போ் காயமடைந்துள்ளனா்.

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாந... மேலும் பார்க்க

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 ... மேலும் பார்க்க

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 11 மணிக்கு ... மேலும் பார்க்க

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கே... மேலும் பார்க்க

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க