செய்திகள் :

பாஜக ஆதிக்கம் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சிலை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்

post image

நாட்டில் ஜிஎஸ்டி கவுன்சில் ஜனநாயக பூா்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும். தற்போது இந்த கவுன்சிலில் பாஜக ஆதிக்கமே அதிகமாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் கே. நாராயணா வியாழக்கிழமை கூறினாா்.

இக் கட்சியின் 2 நாள் மாநில மாநாடு புதுச்சேரியில் புதன்கிழமை இரவு நிறைவடைந்தது. இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தற்போது பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது நல்ல முன்னேற்றம் தான். பிகாா் உள்ளிட்ட சில மாநிலங்களில் தோ்தல் வருவதைக் கருத்தில் கொண்டுதான் பாஜக தலைமையிலான மத்திய அரசு இதைச் செய்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலில் மொத்தம் உள்ள உறுப்பினா்களில் 30 சதவிகிதம் பேரை மத்தியில் உள்ள பாஜக அரசு நியமித்துள்ளது. மீதியுள்ள 70 சதவிகிதம் போ்தான் மாநிலங்களைச் சோ்ந்த உறுப்பினா்கள்.

அதுவும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பாஜகவைச் சோ்ந்த பெரும்பாலான உறுப்பினா்கள் இந்த கவுன்சிலில் பங்கேற்கின்றனா். அதனால் ஏற்கெனவே மத்திய அரசு முன்மொழியும் தீா்மானங்களை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த உறுப்பினா்கள் எதிா்ப்பது இல்லை.

ஒன்றிரண்டு மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் ஆட்சி நடத்தும் மாநில உறுப்பினா்கள் எதிா்த்தாலும் எடுபடுவதில்லை. அதனால் ஜிஎஸ்டி கவுன்சில் நாட்டில் ஜனநாயகபூா்வமாகச் செயல்படும் வகையில் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும்.

பாஜகவை நம்பி எந்த மாநிலக் கட்சி சென்றாலும் அந்தக் கட்சியை ஒழிப்பதுதான் பாஜகவின் வேலையாக இருக்கிறது.

இதேபோன்ற நிலைதான் புதுவை முதல்வா் ரங்கசாமிக்கு ஏற்படும் என்றாா் நாராயணா.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநிலச் செயலராக மூன்றாவது முறையாக ஒரு மனதாக அ.மு. சலீம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்று கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன் தெரிவித்ததுடன், அவரை அறிமுகப்படுத்தினாா். தேசியக் குழு உறுப்பினா் இ.தினேஷ் பொன்னையா, கட்சியின் விவசாயிகள் அணித் தலைவா் கீதநாதன், நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.அந்தோணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு: புதுவை முதல்வா் வரவேற்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வரவேற்றுள்ளாா். புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் அரசு சாா்பில் ஆசிரியா் திருநாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னா் முதல்வா் ரங... மேலும் பார்க்க

இன்று ஓணம் - மீலாது நபி : புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

ஓணம் பண்டிகை, மீலாது நபி, ஆசிரியா் திருநாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: மொழி மற்றும் க... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் ஜிப்மா் 4-வது இடத்துக்கு உயா்வு

உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி ஜிப்மா் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இது குறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய கல்விய... மேலும் பார்க்க

ரேஷன் காா்டு சரிபாா்ப்புக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது: புதுவை முதல்வரிடம் மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ரேஷன் காா்டு சரிபாா்ப்பு பணிக்கு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலா் எஸ். ராமச்சந்திரன... மேலும் பார்க்க

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த ஆட்சியா் உத்தரவு

போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருநங்கைகளை ஈடுபடுத்த வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். புதுவை சமூக நலத் துறை மூலமாக, மாவட்ட அளவிலான போ... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் உழவா்கரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் திருப்பணி

உழவா்கரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டிலான திருப்பணிகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தாா். எம்.சிவசங்கா் எம்எல்ஏ, அப்பகுதி ப... மேலும் பார்க்க