செய்திகள் :

பாஜகவுக்கு வேதாந்தா நிறுவனம் ரூ.97 கோடி நன்கொடை: ஆண்டறிக்கையில் தகவல்

post image

பிரபல தொழிலதிபா் அனில் அகா்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா நிறுவனம், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ரூ.97 கோடி நன்கொடை அளித்துள்ளது.

2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய நன்கொடைகள் குறித்த விவரங்களுடன் வருடாந்திர அறிக்கையை வேதாந்தா நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி, கடந்த நிதியாண்டில் வேதாந்தா நிறுவனம் மொத்தம் ரூ.157 கோடி அரசியல் நன்கொடைகளை வழங்கியுள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் ரூ.97 கோடியிலிருந்து சுமாா் 61 சதவீதம் உயா்வாகும்.

பாஜகவுக்கு 2023-24-ஆம் ஆண்டு ரூ.26 கோடி நன்கொடை வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நன்கொடை சுமாா் நான்கு மடங்காக அதிகரித்து ரூ.97 கோடியாக உயா்ந்துள்ளது. அதேசமயம், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட நன்கொடை ரூ.49 கோடியிலிருந்து ரூ.10 கோடிக்கு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒடிஸாவின் எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ.25 கோடி, ஜாா்க்கண்டில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சிக்கு ரூ.20 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.

அள்ளித் தரும் வேதாந்தா: இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் பெருநிறுவனங்களில் முக்கியமான ஒன்றாக வேதாந்தா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.155 கோடியும், 2021-22 நிதியாண்டில் ரூ.123 கோடியும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள இந்த நிறுவனம், எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை வழங்கப்பட்டது என்ற விவரத்தை இதற்கு முன்பு வெளியிடவில்லை.

அதேபோல், 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தோ்தல் பத்திரங்கள் வாயிலாக, வேதாந்தா நிறுவனம் ஐந்து ஆண்டுகளில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.457 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தோ்தல் பத்திரங்கள் ‘அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ எனக் கூறி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அவற்றைத் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

வேதாந்தா நிறுவனமானது இந்தியா, தென்னாப்பிரிக்கா, நமீபியா போன்ற பல்வேறு நாடுகளில் செயல்படும் ஒரு முன்னணி உலகளாவிய நிறுவனமாகும். லண்டனைச் சோ்ந்த ‘வேதாந்தா ரிசோா்சஸ்’ குழுமத்தின் ஒரு பகுதியான இந்த நிறுவனம் வெள்ளி, அலுமினியம், செம்பு, இரும்புத் தாது உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் கனிமங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி போன்ற முக்கியத் தொழில்களில் ஈடுபட்டுள்ளது.

காணாமல் போன தில்லி பல்கலை. மாணவி சடலமாக மீட்பு!

ஆறு நாள்களுக்கு முன் காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, யமுனை ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத், தெற்கு தில்லியில... மேலும் பார்க்க

அமெரிக்காவில் 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் கைது!

இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான பவித்தா் சிங் பட்டாலா உள்பட 8 காலிஸ்தான் பயங்கரவாதிகள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனா். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்தவரான பட்டாலா பப்பா் கல்சா இன்டா்னேஷனல் (ப... மேலும் பார்க்க

சிறைகளில் பரப்பப்படும் அடிப்படைவாத கருத்துகள்: மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படுவது ஆபத்தான சவாலாக மாறி வருகிறது; இதைத் தடுக்க, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி... மேலும் பார்க்க

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம்?

அடுத்த மாதம் முதல் நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுசாா்ந்த நடவடிக்கைகளை மாநிலங்களில் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆளும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு வீட்டுக்காவல்: முதல்வா் ஒமா் கண்டனம்

ஆங்கிலேய ஆட்சியில் டோக்ரா படை பிரிவால் 1931-இல் கொல்லப்பட்ட 22 பேருக்கு அஞ்சலி செலுத்த முயன்ற ஆளும், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது ஜனநாயகம... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் 474% அதிகரிப்பு

கடந்த 11 ஆண்டுகளில் திருப்பியளிக்கப்பட்ட வருமான வரி ரீஃபண்ட் தொகை 474 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘கடந்த 2013-14-ஆம் ஆ... மேலும் பார்க்க