செய்திகள் :

பாஜகவை மிரட்டும் கர்ப்பிணிப் பெண்! யார் இவர்?

post image

மத்தியப் பிரதேசத்தில் தங்கள் கிராமத்தில் சாலை வசதிகோரி புகார் அளித்த பெண், மத்திய அமைச்சரிடமும் முறையீடு செய்வதாக அம்மாநில எம்.பி.க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் சிதி மாவட்டத்தில் லீலா சாஹூ என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது பயணங்கள், கிராமப்புற கலாசாரம், கண்காட்சிகள், அன்றாட வாழ்க்கை குறித்த விடியோ மற்றும் தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்ததன்மூலம், பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து, சமூகநலப் பிரச்னைகளையும் விடியோவாக பதிவிடத் தொடங்கினார்.

சமூகநலப் பிரச்னை தொடர்பான விடியோக்கள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உள்பட மத்திய அமைச்சர்களையும் கேள்வியெழுப்பத் தொடங்கினார்.

இந்த நிலையில், தங்கள் கிராமத்தில் சாலை சரியில்லை என்றும், போதிய சாலை வசதி இல்லையென்றும் கிராம அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். இருப்பினும், அவரின் புகார் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.

இதனிடையே, கர்ப்பிணிப் பெண்கள் இருக்கும் கத்தி - பகைஹா பகுதியில் சாலை வசதிகோரி விடியோ ஒன்றையும் சமூக ஊடகங்களில் லீலா பதிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, லீலாவின் புகார் விடியோவைப் பார்த்த பாஜக எம்.பி. ராஜேஷ் மிஸ்ரா, பெண்களின் பிரசவத் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பேருந்து வசதி செய்து தருவதாகக் கூறினார். இதனையடுத்து, தனது பிரசவ காலத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரடியாகச் சென்று புகார் அளிப்பதாகவும் லீலா எச்சரிக்கை பாணியில் கூறியுள்ளார்.

How a 9-Month Pregnant Woman is Using Social Media to Expose Madhya Pradesh's Infrastructure Failures

கேரளத்தில் புதியதாக மற்றொரு நிபா பாதிப்பு?

கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தி... மேலும் பார்க்க

4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!

4-ஆம் வகுப்பு மாணவியொருவர் பள்ளியில் உணவருந்தும்போது இருமுறை மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகார் பகுதியிலுள்ள ஒரு ... மேலும் பார்க்க

மணிப்பூரில் வீடுகளுக்குத் திரும்ப முயற்சிக்கும் மக்கள்! தடுக்கும் பாதுகாப்புப் படைகள்!

மணிப்பூர் மாநிலத்தில் உள்ளூரிலேயே இடம்பெயர்ந்த 100-க்கும் அதிகமான மக்களைத் தங்களது வீடுகளுக்குத் திரும்பவிடாமல் பாதுகாப்புப் படையினர் தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையால்,... மேலும் பார்க்க

மரண தண்டனையிலிருந்து நிமிஷா பிரியா விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது...

யேமன் நாட்டில் சிறையிலிருக்கும் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற இன்னும் சில சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் தரப்பில் போராடும் வழக்குரைஞர் தெரிவித்திருக்கிறார். நிமிஷா பிரியா தரப்பில் வாதாட... மேலும் பார்க்க

ராகுலின் ரே பரேலி பயணம் ரத்து: காங்கிரஸ் அறிவிப்பு!

காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களை பாஜக குறிவைத்து நடவடிக்கை எடுப்பதாக... மேலும் பார்க்க