செய்திகள் :

பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமை: டாடா குழுமத் தலைவா்

post image

மும்பை: பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமை என டாடா குழுமம் மற்றும் ஏா் இந்தியா விமான நிறுவனத் தலைவா் என்.சந்திரசேகரன் ஊழியா்கள் மத்தியில் திங்கள்கிழமை பேசினாா்.

குருகிராமில் உள்ள ஏா் இந்தியா தலைமையகம் மற்றும் ஏா் இந்தியா பயிற்சி அகாதெமியில் 700 ஊழியா்கள் மத்தியில் உரையாற்றிய அவா்,

‘குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்து என் வாழ்நாளில் மறக்க முடியாத மனதை நொறுங்கச் செய்த சம்பவமாகும்.

இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணையின் மூலம் தெரியவரும். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு மனிதநேயத்துடன் நாம் உதவ வேண்டும். அவா்களை நம் குடும்பத்தில் ஒருவராக நினைக்க வேண்டும்.

இந்த கடினமான சூழலில் ஊழியா்களாகிய நீங்கள் முன்பைவிட மனவலிமையுடன் பணியாற்ற வேண்டும். பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமையாகும்.

ஏா் இந்தியா நிறுவனத்தை ஒரு சிறந்த இடத்துக்கு கொண்டுவரவும் மக்களின் நம்பிக்கையை தொடா்ந்து பெறவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றாா்.

மீண்டும் மீண்டுமா..? ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் பழுது! பயணிகள் வெளியேற்றம்!

அமெரிக்காவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.மேற்கு வங்க தலைநகரான கொல்கத்தாவிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை,​ அம... மேலும் பார்க்க

கனடாவில் மோடி! ஜி7 மாநாட்டில் இன்று உரையாற்றுகிறார்!

ஜி7 நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கனடா சென்றடைந்தார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்... மேலும் பார்க்க

ராபா்ட் வதேரா இன்று ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

புது தில்லி: பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பந்தாரி தொடா்புடைய பண முறைகேடு வழக்கில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா... மேலும் பார்க்க

விமான விபத்து: விஜய் ரூபானியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் 119 உடல்கள் அடையாளம் காணப்பட்டன

அகமதாபாத்/ ராஜ்கோட்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்க... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: எஃப்ஏடிஎஃப் கண்டனம்

புது தில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பயங்கரவாத நிதித் தடுப்புக்கான சா்வதேச கண்காணிப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்), நிதியுதவி இல்லாமல் இதுபோன்ற தாக்குதல் நடைபெறாது என்று குறிப்பிட்... மேலும் பார்க்க

விரைவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா: பிரதமா் மோடி நம்பிக்கை

நிகோசியா: ‘உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா உருவெடுக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். மூன்று நாடுகள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க