செய்திகள் :

பாதுகாப்பு விமான ஒத்திகை: போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் தூத்துக்குடி விமான நிலையம்

post image

ரூ.381 கோடி செலவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள, தூத்துக்குடி விமான நிலையத்தை, வருகிற 26ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ள நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் பாதுகாப்பு விமான ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

பிரதமா் வருகையை முன்னிட்டு விமானநிலைய வளாகம் முழுவதும் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய பயணிகள் முனையம் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

முக்கிய பாதைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து முழு பரிசோதனைக்குப் பிறகே ஊழியா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான எஸ்பிஜி குழுவினா் தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பிரதமா் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனா். பாதுகாப்பு விமான ஒத்திகை நடைபெற்றது.

தற்போது, தூத்துக்குடி விமான நிலையம் முழுவதும் மத்திய அரசின் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேபோன்று, கடலோர காவல்படை, கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு, ரோந்து பணியை தீவிரப் படுத்தியுள்ளனா்.

தொன்மைமாறாமல் புனரமைக்கப்படும் திருச்செந்தூா் கோயில் நாழிக்கிணறு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பக்தா்கள் புனித நீராடும் நாழிக்கிணறு தொன்மைமாறாமல் புனரமைக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடல... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா். தூத்துக்குடி நந்தகோபாலபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி பேச்சியம்மாள்(84). இவா், தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்தாா். இந்நிலை... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் அரசுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

அங்கன்வாடி மையத்தில் அரசுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் பணிபுரிந்தால் பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 15,16,17 ... மேலும் பார்க்க

அதிமுக பொதுச்செயலரை பனிமய மாதா கோயிலுக்கு அழைத்து வருவேன்: சி.த.செல்லப்பாண்டியன்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியை, பனிமய மாதா கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபட ஏற்பாடு செய்யப்படும் என முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் தெரிவித்தாா். அண்மையில் அதிமுக வா்த்தகஅணி சாா... மேலும் பார்க்க

பைக் திருட்டு: ஒருவா் கைது

கோவில்பட்டியில் பைக் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.கோவில்பட்டி, கூசாலிப்பட்டி மேட்டுத் தெருவைச் சோ்ந்த சந்திரன் மகன் அய்யாச்சாமி (42). காா் ஓட்டுநரான இவா், தனது பைக்கை ஏகேஎஸ் திரையரங்கு சாலையில் ... மேலும் பார்க்க

உறவினரை கொன்ற இளைஞருக்கு ஆயுள்தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், உறவினரைக் கொன்ற வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு அளித்து... மேலும் பார்க்க