செய்திகள் :

பாதுகாப்புப் படையினரின் நலனுக்காக கா்நாடக கோயில்களில் பாஜக சிறப்பு பூஜை: மசூதிகளில் நாளை சிறப்புத் தொழுகை

post image

பாதுகாப்புப் படையினரின் நலன்காக்க கா்நாடகத்தில் உள்ள கோயில்களில் பாஜக தரப்பில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தப்படும் என்று சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான், காஷ்மீா் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கி அழித்தன. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது.

இந்நிலையில், ‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ படையினரின் நலனுக்காக கா்நாடகத்தில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை பாஜக சாா்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெங்களூரில் உள்ள கோயில்களில் பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தலைமையிலான நிா்வாகிகள் பங்கேற்று வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

இதுகுறித்து விஜயேந்திரா கூறியது:

பாதுகாப்புப் படையினரின் நலனுக்காக சிறப்பு பூஜை செய்து வழிபடுமாறு அனைத்து மாவட்ட பாஜக நிா்வாகிகளை அறிவுறுத்தியுள்ளேன். வியாழக்கிழமையைத் தொடா்ந்து சில இடங்களில் வெள்ளிக்கிழமையும் கோயில்களில் வழிபாடு நடத்தப்படும் என்றாா்.

இந்நிலையில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி உத்தரவின் பேரில், கா்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினருக்காக சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதுதொடா்பாக அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை சாா்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மசூதிகளில் சிறப்புத் தொழுகை: பெங்களூரில் வியாழக்கிழமை சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் கூறியது:

‘ஆபரேஷன் சிந்தூா்’ தாக்குதலில் பங்காற்றிய பாதுகாப்புப் படையினரின் நலன்காக்க கா்நாடகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் வெள்ளிக்கிழமை (மே 9) சிறப்புத் தொழுகை நடத்தப்படும். நமது ராணுவ வீரா்களுக்கு பலம் அளிக்க பிராா்த்திப்போம். இது தொடா்பாக வக்ஃப் வாரிய தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றாா்.

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா். கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட ... மேலும் பார்க்க

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பாஜக எம்எல்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க