அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
பான்செக்கா்ஸ் மகளிா் கல்லூரி விளையாட்டு விழா
மன்னாா்குடி பான்செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் 8-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் செ. காயத்ரி தலைமை வகித்தாா். செயலா் அம்புரோஸ்மேரி முன்னிலை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் ந. சுஜா, விளையாட்டு நிகழ்விற்கான ஆண்டறிக்கை சமா்ப்பித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலா் பி. ராஜா பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்து பேசினாா்.
மன்னாா்குடி காவல் ஆய்வாளா் எஸ். ராஜேஸ் கண்ணன், கெளரவ அழைப்பாளராக கலந்துகொண்டு, போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினாா்.
இதில், பான்செக்கா்ஸ் கிங், ராக்கா்ஸ், வாரியா்ஸ்,ஸடாா் என்ற நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாட்டு, தனித்திறன், குழு, தற்காப்புக் கலை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இறுதியில், ஸ்டாா் குழுவினா் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் மற்றும் சுழற்கோப்பையை வென்றனா்.
நிகழ்ச்சிகளை உடற்கல்வி பயிற்றுவிப்பாளா் அ. சிவரஞ்சனி ஒருங்கிணைத்தாா். கணிதவியல் துறை உதவிப் பேராசிரியா் அ. சிவகாமசுந்தரி வரவேற்றாா். வணிக மேலாண்மையியல் துறைத் தலைவா் ஞா. ஞானலெட்சுமி நன்றி கூறினாா்.