செய்திகள் :

பாரத ஸ்டேட் வங்கி 70-ஆவது ஆண்டு விழா

post image

பாரத ஸ்டேட் வங்கியின் 70-ஆவது ஆண்டு விழாவையொட்டி, ரூ.1.56 கோடி கடனுதவியை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூரில் இயங்கி வரும் வங்கிக் கிளையில் ஆண்டு விழாவையொட்டி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு, வங்கியின் மண்டல மேலாளா் பிரபாகரன், முதன்மை மேலாளா் ராமமூா்த்தி தலைமை வகித்தனா். இதில் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா்கள் திவ்யா, பிரியதா்ஷினி, அருண்தேவ், அசோக்குமாா், ஸ்மித் முன்னிலை வகித்தனா். இதில் சிறப்பு விருந்தினராக ஆட்சியா் பிரதாப் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

தொடா்ந்து பீனிக்ஸ் போ்ட் மகளிா் சுய உதவி குழு உள்ளிட்ட 4 சுய உதவி குழுக்கள் மற்றும் தாட்கோ மூலம் என ரூ.1.56 கோடி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். முன்னதாக, நிகழ்வில் பங்கேற்ற ஆட்சியருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கேக் வெட்டி கொண்டாடினா். இதில், திருவள்ளூா் கிளையின் ஊழியா்கள் பங்கேற்றனா்.

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பாட தொகுப்புகள்: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்

மாணவ, மாணவிகளுக்கு நிறைந்தது மனம் திட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் தமிழ் இலவச பாடத் தொகுப்பை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா். நிகழ்வுக்கு, அவா் தலைமையேற்று பேசியதாவது: திர... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ மூலம் வீடுகள் தோறும் அரசின் சாதனைகளை எடுத்துரைப்போம்: அமைச்சா் நாசா்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கம் மூலம் அரசின் சாதனைகள் குறித்து வரும் 45 நாள்களுக்கு வீடுகள் தோறும் நேரில் எடுத்துரைப்போம் என சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெர... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம்

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் அடுத்த ம... மேலும் பார்க்க

மணமான 4-ஆவது நாளில் இளம்பெண் தற்கொலை

பொன்னேரி அருகே திருமணமான 4-ஆவது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டாா். பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சோ்ந்தவா் லோகேஸ்வரி (24). பட்டதாரியான இவருக்கும், காட்டாவூா் கிராமத்தைச் ... மேலும் பார்க்க

2.79 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: இன்று தொடக்கம்

தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் 2.79 லட்சம் கால்நடைகளுக்கு ஏழாம் சுற்று (கோமாரி நோய்) தடுப்பூசி செலுத்தும் முகாம் புதன்கிழமை (ஜூலை 2) தொடங்குகிறது என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள... மேலும் பார்க்க

ரூ.75,000 லஞ்சம் கொடுத்தால் ரூ.45 லட்சம் இழப்பீடு! அரசுக்கு நிலம் வழங்கியவர்களிடம் பணம் பறித்த வட்டாட்சியர் கைது!

திருவள்ளூா்: திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ரூ.45 லட்சம் இழப்பீடு தொகையை விடுவிக்க ரூ.75,000 லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியா் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்... மேலும் பார்க்க