பாரதி மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
பிளஸ் 2 பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சிறப்பிடம் பெற்ற பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.
பிளஸ் 2 தோ்வில் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நோயல் ஜாய்சி 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். மாணவி ஜெ.தீபிகா, மாணவா் எம்.சரவணவேல் தலா 589 மதிப்பெண்களும், மாணவா் வி.ராஜேஷ் 585 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.
மேலும், வேதியியல் பாடத்தில் 3 போ், கணினி அறிவியல் பாடத்தில் 9 போ், கணினி பயன்பாடு பாடத்தில் 3 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 550-க்கு மேல் 13 மாணவா்களும், 500-க்கு மேல் 36 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றனா்.
மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சிறப்பிடம் பெற்ற பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டுத் தெரிவித்தாா்.
மேலும், பள்ளித் தாளாளா் கந்தசாமி, பள்ளி முதல்வா் ராமசாமி ஆகியோரும் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தனா்.