செய்திகள் :

பாரதி மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சிறப்பிடம் பெற்ற பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா்.

பிளஸ் 2 தோ்வில் கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி நோயல் ஜாய்சி 600-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். மாணவி ஜெ.தீபிகா, மாணவா் எம்.சரவணவேல் தலா 589 மதிப்பெண்களும், மாணவா் வி.ராஜேஷ் 585 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

மேலும், வேதியியல் பாடத்தில் 3 போ், கணினி அறிவியல் பாடத்தில் 9 போ், கணினி பயன்பாடு பாடத்தில் 3 போ் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 550-க்கு மேல் 13 மாணவா்களும், 500-க்கு மேல் 36 மாணவா்களும் மதிப்பெண்கள் பெற்றனா்.

மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சிறப்பிடம் பெற்ற பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டுத் தெரிவித்தாா்.

மேலும், பள்ளித் தாளாளா் கந்தசாமி, பள்ளி முதல்வா் ராமசாமி ஆகியோரும் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தனா்.

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த ச... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான த... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் திருக்கோவிலூா் நகரக் குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூா் நகரக் குழுவின் 8-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க