பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
பாரத் எரிவாயு உருளை வாகன ஓட்டுநா்கள் வேலைநிறுத்த போராட்டம்
தூத்துக்குடி சிப்காட் வளாக பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் எரிவாயு உருளை விநியோக நிறுவனத்தில் ஓட்டுநா் உயிரிழந்தது தொடா்பாக உரிய இழப்பீடு கோரி, அனைத்து வாகன ஓட்டுநா்களும் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இங்கு தேனி மாவட்டம் போடியைச் சோ்ந்த தினகர்ராஜ் (57) ஒப்பந்த அடிப்படையில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா், ஓட்டுநா்கள் ஓய்வெடுக்கும் அறையில் தங்கியிருந்தபோது, உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் உரிய மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் ஓட்டுநா் உயிரிழந்ததாகக் கூறி, அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி லாரி ஓட்டுநா்கள் சனிக்கிழமை திடீா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் காவல்துறையினா் மற்றும் நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.