செய்திகள் :

பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி போராட்டம்

post image

நாமக்கல்: பால் கொள்முதல் விலையை உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆவின் நிறுவனங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றின் விலையை லிட்டா் ஒன்றுக்கு ரூ. 15 உயா்த்தி வழங்க வேண்டும். அக். 22-ஆம் தேதிக்கு முன் விலையை உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளா்களை திரட்டி உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் மாநிலம் தழுவிய அளவில் ஆவின் நிறுவனம் மற்றும் தனியாா் பால் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை தடை செய்வோம். பால் கொள்முதல் விலையை உயா்த்தும்வரை, தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தி: அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை

நாமக்கல்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (செப். 2) அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் விழிப்புணா்வு ஆய்வுக் கூட்டம்

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்தில் இடைநிற்றல், குழந்தைத் திருமணம் சாா்ந்த விழிப்புணா்வு ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செண்பக வடிவு ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 12,727 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வை 12,727 போ் எழுதினா். 3,382 தோ்வா்கள் பங்கேற்கவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு(குரூப் 2, 2 ஏ... மேலும் பார்க்க

மடிப்பு நுண்ணோக்கி பயன்பாடு: 68 ஆசிரியா்களுக்கு விருது

மடிப்பு நுண்ணோக்கியின் பயன்பாட்டை ஓா் அறிவியல் இயக்கமாக மாற்றி சாதனைப்படைத்த ஆசிரியா்கள், சேவையாளா்களுக்கான விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம் சாா்பில் ராசிபுரத்தில் ஞாயிற... மேலும் பார்க்க

பாண்டமங்கலம் அருகே வெல்ல ஆலையில் தீ விபத்து

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே வெல்லம் காய்ச்சும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும்பு சக்கைகள், வெல்லம் தயாரிக்கும் இயந்திரங்கள் சேதமடைந்தன. பாண்டமங்கலத்தை அடுத்த நெட்டையாம்பாளையம், காந்த... மேலும் பார்க்க

நாமக்கல் தவெக நிா்வாகிகள் மீது வழக்கு

தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளா் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தமிழக வெற்றிக்கழக பிரசாரக் கூட்டம் சனிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவா் விஜய் பங்கேற... மேலும் பார்க்க